states

சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று பால புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு

மதுரை, அக்.2-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று, பால புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு: “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார்” விருதுக்கு மதுரை சிறுவர் ஒரு வர் விண்ணப்பிக்க முடியவில்லை.கார ணம் விண்ணப்பிக்க இணையத்தில் வழி இல்லை. இதுகுறித்து அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மூன்று கடிதங்கள் (22.08.2022, 24 & 28.09.2022 ) எழுதினேன். ஒரு வழியாக Awards.nic.in இணைய தளம் தற்போது மேம்படுத்தப்பட்டு  விண் ணப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளது. நான்  கேட்டுக்கொண்டது போல விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பிரதமர் பெயரில் உள்ள விருது.  இளம்  சாதனையாளர்களுக்கான விண்ணப்பம் பெறும் செயலில் இத்தனை குளறுபடிகள் வேதனை தருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.