states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சு.வெங்கடேசன் எம்.பி. விடுத்த கோரிக்கையால் ஒன்றிய  அரசு பணியாளர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமல்

மதுரை, மார்ச் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விடுத்த கோரிக்கை யால்  1.1.2004-க்குப் பின்னர்  பணி நிய மனம் பெற்றவர்களுக்கு பழைய  பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசு  துறைகளில் 22.12.2003 அன்று புதிய  பென்சன் திட்டத்திற்கான அறிவிக்கை  வெளியிடப்பட்டது. ஆனால் அந்த  தேதிக்கு முன்பு வேலைவாய்ப்பு விளம்  பரம் வந்து 01.01.2004- க்குப் பின்னர்  பணி நியமனம் பெற்றவர்களுக்கு  வரையறுக்கப்பட்ட பழைய  பென்சன்  திட்டம் தரப்படாமல் இருந்தது. அவர்  களுக்கு பழைய பென்சன் திட்டமே  வழங்கப்பட ஒன்றிய  பணியாளர்  துறை  அமைச்சருக்கு 27.10.2021 அன்று நான்  கடிதம் எழுதியிருந்தேன்.    அந்த கோரிக்கை இப்போது வெற்றி பெற்றுள்ளது. ஒன்றிய பணியா ளர் துறை அமைச்சருக்கு நன்றி! புதிய பென்சனில் இருந்து பழைய  பென்சன் திட்டத்திற்கு மாற வாய்ப்புப் பெற்றுள்ள ஊழியர்களுக்கு என் வாழ்த்துக்கள்! இந்த வெற்றியையும் கடந்து அனைத்து ஊழியர்களுக்கும் புதிய  பென்சன் திட்டம் ரத்து ஆகி பாதுகாக் கப்பட்ட பென்சன் கொண்ட பழைய பென்சன் திட்டம் மீட்கப்பட குரல் கொடுப்போம். எனது குரலும் இணை யும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

புதிய வைரஸ் காய்ச்சலால் ஆபத்து இல்லை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் விளக்கம்

புதுதில்லி, மார்ச் 5-  நாடு முழுவதும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சலால் ஆபத்து இல்லை என்றும் ஆனால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்  ‘எச்.3 என்-2’ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.  காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுகுறித்து  இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவிக்கையில், “சமீபத்தில் நாடு முழுவதும் பலரை பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு,  H3n2 வைரஸ்தான் காரணம். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை .சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது. அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இதை தடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

கொரோனா எண்ணிக்கை  மீண்டும் அதிகரிப்பு

புதுதில்லி, மார்ச் 5- நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் லேசான வேகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதிவரை நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200-க்குள்  இருந்தது. மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை திடீரென 300-ஐத்  தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2,791 ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில்  மீண்டும் வினாத்தாள் சர்ச்சை

மும்பை, மார்ச் 5- பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் பள்ளி தேர்வு வினாத்தாள் விவகாரத்தில் அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்திய பள்ளி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக கேள்வி இருக்கும் இடத்தில் பதில் அச்சடிக்கப்பட்டு வினாத்தாள் வெளியாகிய நிலையில், வெள்ளியன்று 12-ஆம் வகுப்பு கணித வினாத்தாள் தேர்வு தொடங்கும் 30 நிமிடத்திற்கு முன்பு சமூக வலைத்தளங் களில் கசிந்தது. இந்நிலையில் இது தொடர்பாக 3 மாணவர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மும்பை போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். 

6000 பேரை பணியமர்த்தும் தைவான் நிறுவனம்

ஹிசிஞ்சு, மார்ச் 5- கடும் பொருளாதார நெருக்கடியால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய சர்வதேச நிறுவனங்கள் மிக மோசன அளவில் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், தைவானைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய சிப்மேக்கர் நிறு வனமான டிஎஸ்எம்சி 6,000 புதிய ஊழியர்களை பணியமர்த்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர்  விலகல்

சென்னை, மார்ச் 5- பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர்  நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.     இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒன்றரைஆண்டுகளாக தமிழக பாஜக தலைமைதொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி யது. கட்சியை பற்றிதுளியும் சிந்திக் காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் வேறு எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கற் களையும் வியாபாரமாக்கி இடத்திற் கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலை மையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்ததுதான் மிச்சம் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட் டுள்ளார்.

பாஜக மீது  துரைவைகோ தாக்கு 

சென்னை, மார்ச் 5 வடமாநில தொழிலாளர்கள் பிரச் னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறுகை யில்,  புலம்பெயர்ந்த தொழிலாளர் கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதி யின்மை, வன்முறையைப் பரப்பு வதற்கான முயற்சியாகும். வதந்தி களைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாச மாக்குவதற்கும் இந்தி பேசும் மாநி லங்களில் வாழும் தமிழர்க ளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்குமான முயற்சியாகும் என்றும் துரை வைகோ கூறினார்.

ஆன் லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

சென்னை,மார்ச் 5- கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45).  இவர் திடீரென்று மாயானார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ராதா, வீட்டில் இருந்த கணவரின் செல்போனை ஆய்வு செய்தார். அப்போது அதில் “ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. மாயமான சுரேஷ் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரியவந்துள்ளது. அவரது  உடலை கைப்பற்றி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.