உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா என்பதை ஆய்வு செய்வது பற்றி பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தில்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை என தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்துசேனா வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோச மடைந்து வருவதால் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களின் (ஏர் பியூரி பையர்கள்) விற்பனை அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள சரூர்பூர் கலான் கிராமத்தில் மசூதி ஒன்றின் சுவர்கள் மற்றும் கதவுகளில் “ஜெய் ஸ்ரீராம்” வாசகம் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் நடந்த பார்ட்டி ஒன்றில் பாம்புகளையும், அவற்றின் விஷத்தையும் போதைக்காகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் போலீ சார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் (ஐஐடி சம்பவம்) கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லா சூழல் நிலவிவரு கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் மற்றும் அதனை மேற்பார்வையிடும் அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில் தெலுங்கு நடிகர் ராம்சரண் இணைந்திருக்கிறார்.
மூத்த வழக்கறிஞர்கள் ‘மை லார்ட்’ என்ற வார்த்தையை ‘மை லார்ட்ஸ்’ என அழைப்பதை நீங்கள் நிறுத்தினால் தனது மாதச் சம்பளத்தில் பாதியைத் தருவதாக என வாதத்தின் பொழுது உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா கூறினார்.
ஒரு நாளில் 20 முறைக்கும் அதிகமாக செல்போ ன்களை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் 21% கூடுதலாக இருப்பதாக புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று குளோரின் வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.