states

சிறுபான்மையினரின் கல்வி உதவித்தொகையை நிறுத்துவதா?

இந்தியா முழுமைக்கும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல பிரிவுகளில் வரும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் விண்ணப்பங்களை ரத்து செய்து அநீதியை  நிகழ்த்தியுள்ளனர்

சென்னை : சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்திய ஒன்றிய பாஜக அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு: ஒன்று  முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்க ளுக்கு ஒன்றிய அரசு வழங்கிவந்த ப்ரீ மெட்ரிக்கல்வி உதவித்தொகை இனி 9  மற்றும் 10 ஆம்  வகுப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது சிறுபான்மை மாணவர்களின் கல்வி வாய்ப்பின் மீது மோடி அரசு தொடுக்கும் கொடூர தாக்குதல் ஆகும்.

 இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு  கூட்டணி அரசாங்கத் தால் 2006 ஆம் ஆண்டில்கொண்டுவரப்பட்ட திட்டம் தான் சிறுபான்மை மாணவர் களுக்கான ப்ரீ மெட்ரிக் (pre matric) கல்வி உதவித்தொகை திட்டம்.  கடந்த மூன்று மாதமாக இந்தியா முழுமைக்கும் சிறுபான்மை யினர் உள்ளிட்ட பல பிரிவுகளில் வரும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாண வர்கள் அரசின் கல்வி உதவித் தொகைக்குவிண்ணப்பித்து முடித்த நிலையில், தற்போது அம்மாணவர் களின் விண்ணப்பங்கள் அனைத்தை யும் ரத்து செய்து  அநீதியை  நிகழ்த்தியுள்ளனர். இனி 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும்சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இதர கல்வி உதவித்தொகைகளை யும் ஒன்றிய அரசு நிறுத்துவதற்கான சதியாகவே இருக்கும் என்று இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும், அதோடு நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை மாணவர் களுக்கு உடனடியாக வழங்கவேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.