மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்த லுக்கான தொகுதி பங்கீட்டில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட் டணியில் மட்டுமே மோதல் இருப்பதாக பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊட கங்கள் நாள்தோறும் தலைப்புச் செய்தி களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் தொகுதி பங்கீட்டிற்காக அடிதடி நடைபெற்று வருவது எம்விஏ கூட்டணிக்குள் அல்ல, பாஜக தலைமை யிலான மகாயுதி கூட்டணிக்குள் தான். இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியான இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந் திர பட்னாவிஸை சந்தித்து, தனது கட்சி க்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் பட்னாவிஸ், “ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது” என கூறியதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதனால் மகாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடு வது குறித்து கட்சியினருடன் ஒன்றிய அமைச்சர் அத்வாலே ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல பாஜகவின் செயல்பாட்டி ற்கு கூட்டணிக்குள் உள்ள சிறிய கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேறு கூட்ட ணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.