தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, பான்பராக் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்
குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை தமிழ்நாட்டில் விற்பதற்கான தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு