states

தெருச் சண்டை காட்சிகளும் தினமலரின் பதற்றமும்

ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை மறுபடி யும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிட தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த செய்தி அனேகமாக எல்லா  நாளேடுகளிலும் முதல் பக்கத்தில் முக்கியத்துவத்துடன் வெள்ளிக் கிழமை (மார்ச் 10, 2023) காலை வெளி யிடப்பட்டது.   ஆனால் ஆர்எஸ்எஸ்/பிஜேபி-யின் அறிவிக்கப்படாத பிரச்சாரச் செய லாளராகத் தமிழகத்தில் வலம்வந்து கொண்டிருக்கும் தினமலர் நாளேட்டில் ‘சமாதானம்’ என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு முதல் பக்கத்தில் முதன்மைச் செய்தி இடம்பெற்றது. என்ன சமாதானம்?, ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?, ஐநா சபையிலிருந்து அறிவிப்பு எதுவும் வந்திருக்கிறதா? என்று தேடிப் பார்த்தால், அதிமுக - பாஜக இடையே எழுந்துள்ள பிள வைச் ‘சரிசெய்ய’ வானதி சீனிவாசன், எடப்பாடியின் ‘நம்பிக்கைக்குரிய‘ எஸ்.பி. வேலுமணி, தங்கமணி இருவரிடமும் பேசிக்கொண்டிருப்ப தாகக் ‘கூறப்படுவதை‘ தலைப்புச் செய்தியாக்கி, பூரித்துப் புளகாங்கி தம் அடைந்திருந்தது. பிஜேபியின் ஐடி விங் பொறுப்பா ளர் நிர்மல் குமார், மாநிலத் தலைவர்  அண்ணாமலைக்கு, ‘420மலை‘ என்று புது நாமகரணம் சூட்டிவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் அதிமுக வில் ஐக்கியமானதும் அதிர்ச்சிக்கு ஆளானது அண்ணாமலையின் ‘வார் ரூம்’.

(நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் ஹெட் ஆபீசான பிஜேபி-யிலிருந்து, பிராஞ்ச் ஆபீசான அதிமுக-வுக்குத் தாவி இருக்கிறார்கள் என்று முகநூலில் பலர் பதிவிட்டிருப்பதும் தனியே நினைவுகூரத் தக்கது). முன்பு ‘மிஸ்டு கால்’ மூலமாகவும், இப்போது ‘வாட்ஸப்’ வாயிலாகவும் மட்டும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிற தமிழக பிஜேபி,-யின் தீவிர தொண்டர்கள் எடப்பாடியின் படத்தை எரித்துத் தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்ள, பதிலுக்கு அதிமுகவினரும் அண்ணாமலையின் படத்தை எரித்து ‘பழிதீர்த்துக் கொண்ட’ விஷயம் ஊடகங்களில் பரவலானது. பிஜேபியின் தயவால் தான் ஈரோடு கிழக்கில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்ததாகவும், பிஜேபி இல்லாவிட்டால் அதிமுகவின் நிலை மை அதோ கதி தான் என்றும் ஒருசில பிஜேபி தலைவர்கள் யூடியூபில் மிகுந்த ஆக்ரோஷமாக ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையே, தான் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தது, தோசை சுடவும், இட்லி செய்ய வும் அல்ல என்றும், தலைவரா வதற்குத் தான் வந்ததாகவும் ‘புதிய தகவலை’ செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட அண்ணாமலை, ஒருபடி மேலே போய், தனது தாயா ரும், மனைவியும் மனதளவில் ஜெய லலிதாவைவிட 1000 மடங்கு பல மானவர்கள் என்று சொல்ல, அண்ணா மலையின் ‘வாய்க்கொழுப்பு’ தான், அதிமுக-வின் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவர் மத்தியிலும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், எங்கே இந்த வார்த்தைப் போர்களும், அறிக்கை யுத்தங்களும் அடுத்த கட்டத்திற்குப் போய்விடுமோ, நிஜ மாகவே, அதிமுக-பிஜேபி கூட்டணி அறுந்துபோய் விடுமோ என்கிற பதற்றம் தினமலருக்குத் தொற்றிக் கொண்டுள்ளது. பிஜேபியை அதிமுக கழற்றி விட்டால், அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலின்போதுஎன்ன செய்வது?, பிஜேபிதான் தமிழ்நாட் டின் எதிர்க்கட்சி, தமிழகத்தில் தாமரை மலர்ந்துகொண்டே இருக்கிறது, 2026-ல் தமிழகத்தில் பிஜேபி ஆட்சி தான், அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என்றெல்லாம் அந்தக் கட்சியின் வாட்ஸப் வீரர்கள் எழுப்பி வைத்திருக்கிற பில்டப் எல்லாம் மொத்தமாக சிதைந்துபோய் புஸ்வாணமாகிவிடுமே என்கிற மிகப்பெரிய கவலை தினமலருக்கு ஏற்பட்டுவிட்டது.  

அதனால்தான், ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதிக்கும் மசோதா மீண்டும் தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்படவுள்ள செய்தியை மிகவும் சிறியதாக 15-ம் பக்கத்திற்குத் தள்ளி விட்டு ஆளுநர் ரவியைத் திருப்திப் படுத்த முனைந்த தினமலர், அதிமுக- பிஜேபியின் பகிரங்க மோதலைக் கூட, ‘அப்படியெல்லாம் ஒன்று மில்லை, இதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள், சமாதானம் ஆகி விட்டது‘ என்று முந்திக்கொண்டு முதல் பக்க தலைப்புச் செய்தி வெளி யிட்டு மகிழ்ச்சியடைந்தது. ஆனால் பிஜேபி-யின் பிளவு வாதப் பேச்சுக்களையும், வெறுப்பு அரசியலையும் தினம் தோறும் கவனித்து வருகிற தமிழக மக்கள் அதன் அடாவடி அரசியலைப் புறக் கணித்து விரட்டியடிப்பார்கள் என் பதையும், அடுத்தடுத்த தேர்தல்களி லும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்ப தையும் தினமலர் புரிந்துகொள்ள முன்வருவது நல்லது. - கடம்பவன மன்னன்