states

img

கரையை நெருங்கும் புயல்!

போர்ட்பிளேயர்,  மார்ச் 20- அந்தமான்-நிக்கோபர் தீவுகளை அசானி புயல் நெருங்குவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டின் முதல் புயலான அசானி புயல் அந்தமான்-நிக்கோபர் தீவுகளை நெருங்கி வருவதால், தீவுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான - நிக்கோபர் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) சுமார் 100 பணியாளர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர்.  மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக ஆறு நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அசானி புயல் உருவானதைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய அந்தமானில் மழை மற்றும் பலத்த காற்று வீசியது.  “சனிக்கிழமை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிறு காலை 05:30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது இந்தப் புயல் வங்கதேசம்-மியான்மர் கடற் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படு கிறது.