கார்கோன், மே 9 - மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு பேருந்து கீழே விழுந்து விபத்து க்கு உள்ளானதில் 22 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்திலிருந்து இந்தூருக்கு செவ்வாயன்று அதிகாலையில் தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றுள் ளது. இந்தப் பேருந்தில் 70-க்கும் மேற் பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்தானது காலை 8.40 மணி அளவில் தசங்கா பகுதியிலுள்ள தங்கார்கோன் கிராம ஆற்றுப் பாலத்தைக் கடந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. பேருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், அதில் பயணம் செய்தவர்களில் 22 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். இவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் கிளீனரும் அடங்குவர். 31 பேர் படுகாயம் அடைந்த னர். அவர்கள் அனைவருக்கும் கார்கோன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்தியப் பிரதேச அரசு சார்பில் தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிவா ரணம் அறிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பலியா னோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்ச மும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.