states

img

கிராம வங்கிகளை ஸ்பான்சர் வங்கியின் பிடியிலிருந்து விடுவிக்க ஊழியர்கள் - அதிகாரிகள் வலியுறுத்தல்

மதுரை, ஏப். 30-  கிராம வங்கிகளை ஸ்பான்சர் வங்கியின் பிடியிலிருந்து விடுவிக்க  வேண்டும் என தமிழ்நாடு கிராம பேங்க் ஆபீசர் அசோசியேஷன்- தமிழ்நாடு கிராம பேங்க் ஒர்க்கர்ஸ் யூனியன்  வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஞாயி றன்று தொடங்கியது. மாநாட்டிற்கு பரிதிராஜா தலைமை வகித்தார். மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவரும் மதுரை மாநகராட்சி துணை மேயருமான டி.நாகராஜன் பிரதிநிதிகளை வரவேற்றார்.  இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி), அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கம், தமிழ்நாடு கிராம வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தோழ மைச் சங்கங்களின் நிர்வாகிகள், தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி னர். அகில இந்திய கிராம வங்கி  ஊழியர் சங்க தலைவர் ராஜீவன், பொதுச் செயலாளர் வெங்கடேஸ் வரா ரெட்டி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சங்கத்தின் தமிழ்நாடு-புதுவை செய லாளர் ஜா.மாதவராஜ், தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசர் அசோசியே ஷன் தலைவர் அண்டோ கால்பர்ட், பொதுச் செயலாளர் அறிவுடை நம்பி, தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் அஸ்வத்  ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்துப் பேசினர். மாநாட்டில் அயோத்தி திரைப் பட இயக்குநர் ஆர். மந்திரமூர்த்தி, புதுவை பாரதியார் வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சாமு வேல் ஜோதிகுமார், முன்னாள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சுரேஷ்பாபு ஆகியோர் பாராட்டப் பட்டனர்.

தீர்மானங்கள்

மாநாட்டில், கிராம வங்கிகள் கிராம மக்களுக்கே; கிராம வங்கி களை ஸ்பான்சர் வங்கியின் பிடியி லிருந்து விடுவிக்க வேண்டும்;  கிராம வங்கிகளில் தனியார் மூல தனத்தை அனுமதிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; தமிழ்நாடு கிராம வங்கியில் வணிகத்துக்கு ஏற்ற படி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை நியமிக்க வேண்டும்;  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை யும் பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும்; தமிழ்நாடு கிராம வங்கியில் வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும்; தமிழ்நாடு கிராம வங்கியில் பணி யாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நிரந்தர மெஸெஞ்ஜர்களின் ஊதியத்தில் 1/30 வழங்க வேண்டும்; தமிழ்நாடு கிராம வங்கியின் அனைத்து கிளை களிலும் பெண் ஊழியர்களுக்கு தனி  கழிவறை வசதி  செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. திங்களன்றும் மாநாடு தொடர்கிறது.