சென்னை, மே 17- பள்ளி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ண கிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோ வில், பெரம்பலூர், தேனி, புதுக் கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மாணவிகளுக் கான விடுதிகளும் உள்ளன. இதுமட்டுமின்றி மாணவர்களுக் கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை, ஜவஹர் லால் நேரு விளையாட்டரங்கிலும், திருச்சி, (ஸ்ரீரங்கம்) மற்றும் திரு நெல்வேலியிலும் உள்ளன. மாணவ, மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்தூவச்சாரியிலும் உள்ளன. விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கையும், முதன்மைநிலை விளையாட்டு மையங்களில் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கை யும் நடைபெறுகிறது. இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் மே 24ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் விளையாட்ட ரங்கங்களில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், உள்ளிட்ட பல்வேறு போட்டி களும் மாணவர்களுக்கு நடைபெறும். இதில், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு முன்னுரிமை வழங்ககப் படும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை https://sdat.tn.gov.in/எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.