பிரதமர் மோடிக்கு, தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதிலடி
புதுதில்லி, ஜூலை 18 - இலவசங்களை வாக்குறுதிகளாக அளித்து வாக்கு களை பெறும் ரேவடி (ரேவடி என்பது இனிப்பு பலகாரம்) கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது; இது குறித்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச கல்வி, நல்ல கல்வியை கொடுப்பதும், மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதும் இலவச ரேவடி விநியோகம் என்று சொல்லப் படுவதில்லை.
இவைகள் வளர்ந்த மற்றும் பெருமை வாய்ந்த இந்தியாவுக்காக அமைக்கப்படும் அடித்த ளம். அந்த வகையில், இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்குவது இலவசம் அல்ல. மாறாக, நண்பர்களின் (அம்பானி, அதானி) கடன்களை தள்ளுபடி செய்வது தான் இலவச ரேவடி ஆகும். இந்த ரேவடிகளை விநியோகம் செய்து இலவசம் கொடுப்பது யார் என்பதை நான் சொல்கிறேன். இந்த நண்பர்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பி லான கடனை தள்ளுபடி செய்வதும், நண்பர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுத்தருவ தும்தான் உண்மையில் இலவசங்கள் ஆகும். தில்லியைச் சேர்ந்த 18 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து குழந்தைகளுக்கு எங்கள் அரசு பள்ளிகளில் சிறந்த கல்வியை இலவசமாக வழங்கு கிறோம். நான் நாட்டை கேட்க விரும்புகிறேன்? இதன்மூலம் நான் இலவச ரேவடிகளை விநியோகம் செய்கிறேனா அல்லது இந்த நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறேனா?. இவ்வாறு கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.