states

img

கேரளாவில் வளர்ச்சி என்பது சாதாரண மக்களுக்கானது

கொச்சி, அக்.11- கேரளாவில் வளர்ச்சி என்பது சாமானியர்களுக் கானது என்று ஒன்றிய அரசின் நகர்ப்புற திட்ட மிடல் உயர்மட்டக் குழுத் தலைவர் கேசவ் வர்மா தெரி வித்தார். இந்தியாவின் மற்ற பகுதிகளை விட இங்கு உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதற்குக் காரணம், உள் ளாட்சி சுயாட்சி தொடர்பான அரசியல் சட்டத் திருத்தங்க ளை கேரளா தீவிரமாக எடுத்துச் செயல்படுத்தியதுதான் என்றும் அவர் கூறினார். கொச்சியில் நடைபெற்ற ‘போதி 2022’ என்னும் நகர்ப்புற வளர்ச்சி கருத்தரங்கின் நிறைவு நாளில் செய்தியா ளர்களிடம் பேசிய வர்மா மேலும் கூறியதாவது: 

துறைமுக நகரமான கொச்சிக்கு வளமான வரலாறு உண்டு. இது பெரும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை உரு வாக்க வேண்டும். உலக நகரங்களுடன் இணைந்து கொச்சி யும் வளர வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான நிதி சேக ரிப்புக்கு பாரம்பரியமற்ற முறைகள் தேவை. கொச்சியைப் பொறுத்தவரை, சர்வதேச பத்திரங்கள் பரிசீலிக்கப்படலாம். பெரும்பாலான வெளிநாட்டு மலையாளிகள் இதில் முதலீடு செய்வார்கள். முனிசிபல் பத்திரங்களின் திறனையும் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்தியாவின் பல நகரங்கள் முனிசிபல் பத்திரங்களைப் பயன்படுத்தி வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன என்றார். மேலும் அவர் கூறுகை யில், கொச்சியை நாட்டின் தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும். அதற்கு போதி 2022 கருத்தரங்கம் ஒரு சிறந்த கற்றல் செயல்முறை என்றும் கேசவ் வர்மா கூறினார்.