states

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

சென்னை,பிப்.26- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரு கின்றனர்.  இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தினமும் இரவு நேரங்க ளில் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டி ருப்பது வழக்கம். சம்பவத்தன்று, சனிக்கிழமை (பிப்.25) இரவு 9 மணிக்கு கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் தனி யாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத் தில் வந்த 3 வாலிபர்கள், அங்கு பேசிக் கொண்டிருந்த மாணவன், மாண வியை திடீரென சுற்றி வளைத்துள் ளனர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனை மாணவன் தட்டிக்கேட்டதால்  ஆத்திர மடைந்த அந்த கும்பல் மாணவனை கத்தியால் வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் மயங்கி விழுந்தான். அதன்பின்னர் 3 பேரும் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். இதில் மாணவியும் மயக்கமடைந்தார். பின்னர் மாணவன், மாணவியிடம் இருந்த 2 செல்போன்கள், வெள்ளி செயின், கொலுசு மற்றும் தங்க மோதிர த்தை பறித்து தப்பிச் சென்றனர்.  அவ்வழியே சென்ற பொதுமக்கள் மாண வனும், மாணவியும் மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பிறகு, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமுருகன் தலைமையிலான காவலர்கள் மாண வனையும், மாணவியையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். மேலும், தகவலறிந்த டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவன்- மாணவியிடம் விசா ரணை மேற்கொண்டனர். இதனை யடுத்து, 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தப்பிச் சென்ற வர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.