states

சிறப்பு டிஜிபி பாலியல் வழக்கு: ஜூன் 16 தீர்ப்பு

விழுப்புரம், ஜூன் 13- முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் தொல்லை வழக்கில் வருகிற  16 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021  ஆம் ஆண்டு பிப்ரவரி  21 ஆம் தேதி  டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பய ணம் மேற்கொண்டிருந்தார். அவரது  பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக் கும் பணியில் அப்போதைய சட்டம்- ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந் தார்.  பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவ ருக்கு பாலியல் தொல்லை அளித்த தாக புகார் எழுந்தது. இது குறித்து அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த  புகாரின் பேரில் சிறப்பு டிஜிபி பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.  இந்த புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண் காணிப்பாளர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.   இந்த வழக்கு விசாரணை விழுப்பு ரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத் தில் நடந்து வருகிறது, இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப் பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த  ஏப்ரல் 13 ஆம் தேதியன்று நிறைவடைந் தது. 

அதனைத் தொடர்ந்து, இவ்வழக் கில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு  தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப் பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதற்காக இவ்வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆஜராக வில்லை.   அரசு தரப்பு வக்கறிஞர் வைத்திய நாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்களில் நீதிபதி  புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன்  பிறகு முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில்  ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்த னர். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16 ஆம்  தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக் கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  கடந்த 2 வருடமாக மிகவும் விறு விறுப்பாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளி யாக உள்ளதால் காவல்துறை அதி காரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.