states

போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: ஊராட்சி தலைவர் கைது ;10 பேர் மீது வழக்கு

தேனி ,ஏப்.28- போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி தலைவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் 5 வது எதிரியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளரை காப்பாற்றும் முயற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈடுபட்டுள்ளார். போடி அருகே அணைக்கரைப் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ஜெயபிரகாஷ் (30). இவருக்கு பூர்வீக நிலம் 2.54 சென்ட் நிலம் இருந்துள்ளது .கடந்த 17.10.1996 ம் தேதி புகார்தாரரின் தாத்தா  ஒச்சாத் தேவர்  மற்றும் வாரிசுதார்கள் சேர்ந்து சென்னை சுங்கச் சாவடியை சேர்ந்த அந்தோணி மகன் அந்தோணிடாமெனிக் என்பவருக்கு பொது அதிகார ஆவணம் எழுதி வைத்துள்ளனர் . அதன் பின்னர் 15.2.2022 ஆம் தேதி அந்தோணிடாமெனிக் வடுக பட்டியை சேர்ந்த தங்கமாயன் என்பவ ருக்கு கிரையம் பதிவு செய்து கொடுத்துள்ளார் .மேற்படி பதிவின் போது 28.6.2016 ஆம் தேதி இறந்த ஒச்சாத்தேவரும்

26.6.2020 ம் தேதி இறந்த முருகன் என்பவரும் 21.9.2019ஆம் தேதி இறந்த பெரு மாள் என்பவரும் உயிருடன் இருந்த தாக மருத்துவர் பாபு என்பவர் கொடுத்த போலி லைப் சான்றினை போடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர் .போடி காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார், அசல் ஆவணங்கள் காணவில்லை என புகார் ரசீது கொடுத்து, கண்டுபிடிக்க முடியவில்லை என சான்று வழங்கியுள்ளார்.இதில் அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் போலி ஆவணங்கள் உருவாக்கி பத்தி ரப்பதிவு செய்துள்ளனர். மேலும் 22.0.22 ஆம் தேதி தங்க மாயன் அவரது மகனுக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்துள் ளார். ஜெயபிரகாஷ் கொடுத்த மனு வின் மீது 13.09.2022 ஆம் தேதி வழக்கு  பதிவு செய்த விசாரணை செய்த குற்ற பிரிவு காவல் ஆய்வாளர், அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலை வர் லோகநாதன், அந்தோணிடா மெனிக், தங்கமாயன், அவரது மகன்கள்  சஞ்சய்சர்மா, முகேஷ் சர்மா, குரங்கணி ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவர் பாபு, போடி சார்பதிவாளர் கார்த்திகேயன், பத்திர எழுத்தர் முருகன், சாட்சி கையெழுத்து போட்ட குமரேசன், சீனிவாசன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.

ஊராட்சி தலைவர் கைது

இந்த வழக்கில் திடீர் திருப்ப மாக அணைக்கரைப்பட்டி ஊராட்சி  தலைவர் லோகநாதனை குற்றப்பிரிப்பு காவல் ஆய்வளர் அரங்கநாயகி வெள்ளிக்கிழமை கைது செய்தார். காவல் ஆய்வாளரை காப்பாற்றும் எஸ்.பி.  இவர் வெள்ளிக்கிழமை அளித்த  வழக்கு தொடர்பான விபரத்தில்  5வது எதிரியாக குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ்குமார் பெயர் இடம்பெற வில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது விசாரணையில் அவர்  பெயர் எடுக்கப்பட்டதாக தெரி வித்தார். ஆனால் நிலத்தின் அசல் ஆவணம் காணவில்லை என்பதற்கு புகார் ரசீது வழங்கி ,ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை என சான்று வழங்கிய போடி தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாரை வழக்கிலிருந்து விடுவித்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது . மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் குற்றப்பிரிவு அதிகாரிகள் எப்படி வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரின் பெயரை எடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்றம் வரை சென்ற வழக்கில் ,அவர் வழங்கிய வழக்கின் சுருக்கத்தில் 5 ஆம் எதிரி காவல் ஆய்வாளர் என தெரிவித்தும் அவர் பெயர் தைரியமாக எடுக்கப்பட்டுள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் நடந்திருக்காது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.