states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுக: சோனியா காந்தி

“மணிப்பூர் மக்கள் தங்கள் வாழ்நாளில் கட்டியெழுப்பிய அனைத்தையும் விட்டுவிட்டு, வீடு என்று அழைக்கப்படும் ஒரே இடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  அமைதியாக வாழ்ந்த நமது சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் எதிராக மாறுவதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது. மணிப்பூரில் சகோதரத்துவத்தின் உணர்வை வளர்ப்பதற்கு மிகப்பெரிய நம்பிக்கையும், நல்லெண்ணமும் தேவை. மேலும் வெறுப்பு, பிரிவினையின் தீப்பிழம்புகளை உதறிவிடவும் நடவடிக்கை தேவை. மணிப்பூர் மக்களை, குறிப்பாக எனது துணிச்ச லான சகோதரிகளை, இந்த அழகான நிலத்திற்கு நல்லிணக்கம், அமைதியைக் கொண்டுவர வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணிப்பூர் பற்றியெரிகையில் மோடி யோகாசனம் செய்கிறார்

“மணிப்பூர், பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. நமது பிரதமர் ஐ.நா.வில் யோகாசனம் செய்து  கொண்டிருக்கிறார். சஜித் மிர்-ஐ சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை சீனா தடுக்கி றது, மோடி ஐ.நா.வில் யோகாசனம் செய்து கொண்டிருக்கிறார். இது, ரோம் நகரம் பற்றி எரியும்  போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததை உங்களுக்கு நினைவு படுத்தவில்லையா? மோடி யின் ஆட்சி நீரோ மன்னனின் ஆட்சியைப் போல் இல்லையா” என்று ம.பி. முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி இலக்கியத்தை விரும்புகிறோம்; திணித்தால் எதிர்ப்போம்! 

“இந்தி மொழி அழகானது, இந்தி பாடல்களில் வசீகரிக்கும் வார்த்தைகள் உள்ளது. இலக்கிய ஆர்வலர்களாகிய நாங்கள் இந்தி மொழியில் உள்ள இலக்கியங்களை விரும்புகிறோம். ஆனால், அந்த மொழியை நம் மீது திணிக்க விதிகள் அமைக்கப்பட்டால், நாம் விதிகளை மீறு வோம். எந்தவொரு மொழியையும் மக்கள் மீது திணிப்பது எதிர்க்கப்பட வேண்டும். தெலுங்கானா வின் வரையறுக்கப்பட்ட கண்ணோட்டத்தில் இருந்து இந்தியத் தன்மையின் பரந்த கண்ணோட் டத்திற்கு நாம் பயணிக்க வேண்டும். தெலுங்கானா எழுச்சி, அதன் ஒரு பகுதியாக பாரத விழிப்பாக மாற்றப்பட்டது” என தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், தெலுங்கானா சட்டமேலவை உறுப்பினருமான கே.கவிதா பேசியுள்ளார்.

தோல்வி பயத்தால் காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக அஞ்சுகிறது

“ஜம்மு - காஷ்மீரில் நிலைமை, ‘ஜி20’ மாநாடு நடத்துவதற்கு ஏற்றதாக இருக்கும் போது, ஏன்  சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தக்கூடாது? டி.டி.சி., பஞ்சாயத்து, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு சாதகமாக இருக்கும்போது, ஏன் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தக்கூடாது?. உண்மையில், பாஜக பாதகமான சூழ்நிலையை காண்கிறது. தங்களுக்குத் தேர்தல் தோல்வி காத்திருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, இங்கு சட்டப்பேர வைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அவர்கள் தேர்தல் ஆணையத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

‘ஒத்த கருத்துள்ள கட்சிகள், பிரிந்து நிற்கக் கூடாது’

“தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி, பிர காஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி ஆகிய கட்சிகளை புறக்க ணிக்க முடியாது. 2019-இல் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வஞ்சித் பகுஜன் அகாதி  மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுக்கு இடையே வாக்கு பிரிவினை ஏற்படா மல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதை விடவும், கட்சி யில் ஒரு தலைவராக பணியாற்றவே ஆர்வமாக இருக்கிறேன் என்றும் அஜித் பவார் குறிப் பிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் ஐக்கியமானார் ஜிதன்ராம் மாஞ்சி

“எனது தலைமையிலான மகா கூட்டணியில், பாஜக-வுக்கு உளவாளியாக ஜிதன்ராம் மாஞ்சி  செயல்படுகிறார்; பீகார் முன்னாள் முதல்வரான அவர் தங்கள் கூட்டணியிலிருந்து விலகு வது நல்லது” என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார். இதன் பின்னணியில், பீகார் அர சுக்கான ஆதரவை விலக்கிக் கொண்ட ‘ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா’ தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி, வியாழனன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, பாஜக கூட்டணியில் ஐக்கிய மானார். “இன்று முதல் எங்கள் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது” என்று அறிவித்துள்ளார். “பிரதமர் மோடிக்கு சவால் விடக்கூடிய தலைவர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இல்லை” என்றும் பாஜக-வுக்கு காவடி தூக்கியுள்ளார்.

சனாதன தர்மத்திற்கு விவேகானந்தர்; யோகாவிற்கு மோடி

“சுவாமி விவேகானந்தர் 1893-இல் சனாதன தர்மத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். 2014-இல் பிரதமர் மோடி யோகாவை உலக அரங்கிற்கு கொண்டு வந்தார். மக்கள் தங்கள்  குழந்தைகளை யோகா செய்ய வைக்க வேண்டும். கேரள ஸ்டோரி படத்தில் காட்டுவது போல் துப்ரியில் ஏதாவது நடக்குமோ என்ற அச்சம் உள்ளது. இந்த அச்சத்திற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. அது குழந்தைகளுக்கு சனாதன கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதுதான். யோகா மற்றும் கீதையை தினமும் சொல்லிக் கொடுப்பதுதான்” என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியுள்ளார்.

தலையில் சுட்டுத் தற்கொலைக்கு திட்டமிட்ட ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை, பாஜக துணை யுடன் உடைத்து, 40 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மூலம், முதல்வரானவர் ஏக்நாத் ஷிண்டே. இந்நிலையில், இவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருக்கும் பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அது தோல்வியடைந்திருந்தால், தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள திட்ட மிட்டிருந்தார்” என்று ரகசியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதி மசோதா வாபஸ்

இந்தியாவில் இருந்து உயிருள்ள பறவைகள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதை ஒழுங்குபடுத்தும் சட்டத்திருத்தம் குறித்த வரைவு மசோதா, கடந்த ஜூன் 7 அன்று வெளியிடப்பட்டது. இது நமது நாட்டின் பறவைகள் மற்றும் விலங்குகளின் மரபணு தொகுப்பை பாதிக்கலாம் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். இதுதொடர்பாக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்திற்கு அவர்கள் கடிதம் எழுதினர். இதை தொடர்ந்து வரைவு மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறி வித்துள்ளது.

இன்றும் நாளையும்  100 இடங்களில்  மெகா மருத்துவ முகாம்

சென்னை,ஜூன் 22- கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜூன் 23,24 ஆகிய இரு தேதிகளிலும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்றும் இதில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலா ஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.

அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்?

சென்னை,ஜூன் 22- தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர் பாக தமிழ்நாடு குழு தில்லி சென்றுள் ளது. தமிழ்நாட்டின் தலைமைச் செய லாளர் வெ.இறையன்பு வருகிற ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதே போல், டிஜிபி சைலேந்திரபாபுவும் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார்.   இதையடுத்து புதிய தலைமைச் செயலாளர், டிஜிபியை தேர்வு செய்யும் வகையில் உள்துறை செயலாளர் அமுதா தலைமையிலான குழு தில்லி சென்றுள்ளது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தில் நடைபெறும் ஆலோ சனைக் கூட்டத்தில் தலைமைச் செய லாளர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலாளர் பெ.அமுதா, டிஜிபி சைலேந் திரபாபு ஆகியோர் கலந்து கொள்கின் றனர்.

றனர். ஆவினில் பால் கொள்முதல் அதிகரிப்பு

சென்னை, ஜூன் 22- ஆவின் பால் கொள்முதல் அளவு அதி கரித்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை கிண்டியில் நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது”என்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர், “ஆவினில் கடந்த ஏப்ரல் மாதம் நாள் ஒன்றுக்கு 27 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய ப்பட்டது. தற்போது, 37 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளது” என்றார். பால் கொள்முதல் செய்யும் இடத்தில் பாலின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, பால் விலை நிர்ணயம் செய்து ரசீது வழங்கப் படுகிறது என்று அமைச்சர் மனோ தங்க ராஜ் கூறினார்.

 கோயம்பேட்டில் வீணான 100 டன் மாம்பழம் 

சென்னை,ஜூன் 22- மாம்பழம் சீசன் காரணமாக கோயம் பேடு பழ சந்தைக்கு சேலம், திரு வள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 500 டன் மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன.  சில்லரை வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பலர் அதி களவில் மாம்பழங்களை வாங்கி செல்வ தால் மாம்பழம் விற்பனை சூடு பிடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் கனமழை காரணமாக பழ சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரி களின் வரத்து குறைந்தது. இதனால் மாம்பழம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் சுமார் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் தேங்கி அழுகின. அதனை வியாபாரிகள் குப்பையில் கொட்டினர். இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

பள்ளி அருகே மதுக்கடை: மூடக் கோரிக்கை

சென்னை,ஜூன் 22- தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-  தமிழ்நாட்டில் 500 மதுக்கடை களை மூடியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம். அதே நேரத் தில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மார்க்கெட், பஜார், பள்ளிக் கூடங்கள் நிறைந்த பகுதிகளிலுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.