சென்னை,நவ.25- தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு 6 பல்கலைக் கழகங்களில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படு கிறதா என்பதை கண்காணிப்ப தற்காக ‘சமூக நீதிக் கண்காணிப்பு குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டார். இந்நிலை யில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் 5-வது கூட்டம் கடந்த 21 ஆம் தேதி குழுவின் தலைவர் முனைவர்.சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட, பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களை குழு ஆய்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.