states

பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும்

சென்னை, பிப்.11- பாஜகவிற்கு அடிமை சேவகம் செய்வது  அதிமுகவை அழித்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: அதிமுக கட்சியின் ஒரு பிரிவிற்கு தலை வராக உள்ள எடப்பாடி பழனிசாமி, மதச்  சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக் கும் கட்சிகளை பார்த்து, அடிமைச் சாச னம் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும், இந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்றும் ஊடகங்களிடம் புலம்பியுள்ளார். மக்கள் விரோத, மதவெறி பாஜக விடம் நிரந்தர அடிமைச் சாசனம் எழுதிக்  கொடுத்துவிட்டு, கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றவும், கட்சியை நடத்தவும் பாஜக வின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிசாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தா னது. ஈரோடு இடைத் தேர்தலில் தனது  சொந்தக் கட்சி வேட்பாளரை அறிவிப்ப தற்கு கூட பாஜக தலைவரின் அனுமதிக்காக காத்திருந்த எடப்பாடி பழனிசாமியின் நிலை மையை ‘கொத்தடிமை’ என்று சொந்தக் கட்சியினரே அங்கலாய்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வராக இருந்த செல்வி  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக  இரண்டாக பிளந்தது. ஒன்றிய ஆட்சியின் தயவோடு அதிகாரத்தில் ஒட்டிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி செல்வி ஜெயலலிதா பேசிவந்த மாநில நலன் சார்ந்த கோரிக்கை களைக் கூட காற்றில் பறக்கவிட்டார். ஆட்சி  அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று எவ்  வித கொலைபாதகத்திற்கும் தயங்காமல் செயல்பட்டார்.உரிமைகள் பாதுகாப்பு, மாநில உரிமைகள் உள்ளிட்ட கொள்கை அடிப்படையிலேயே திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக/ஆர்.எஸ்.எஸ் சதிக் கூட்டத்தை தோற்கடிக்க முயற்சிக்கின்றன. ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும்  பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று தெரி வித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவினை அதிமுக தான் தாங்கிப் பிடித்து வருகிறது என்று வெட்கமே யில்லாமல் பேசியிருக்கிறார். மதவெறிக் கூட்டத்திற்கு விசுவாச அடிமைகளாக தொடர்வதன் மூலம் சொந்த கட்சிக்கே எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதுகிறார் என்பது திண்ணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.