பிரதமருக்கு தமிழக
முதல்வர் கடிதம்
சென்னை, ஜூன் 13- மேகதாது தொடர்பான எந்த விவாதத்தை யும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற் கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், தில்லியில் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப் படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருந்தார். மேலும், கர்நாடக அரசு மேகதாது அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக வாதங்களை முன்வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழக நீர்வள த்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதி யும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி யிருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலா ண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘‘மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரை களை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத் திற்கு பிரதமர் வழங்க வேண்டும்’’ என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.