10 நாளில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி
மதுரை, மே 13- போராட்டத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாத குருவித்துறை ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் மே 13 வெள்ளி யன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மதுரை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குருவித்துறை ஊராட்சி யில் குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் .தெருக்க ளில் சாக்கடை நீர் தேங்காமல் புதிய சாக்கடை அமைத்துத் தர வேண்டும். பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சரி செய்ய வேண் டும். புதியதாக கட்டிய பெண்கள் கழிப்பறையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேட்டினை கண்டித்தும் ஆறு மாதங்களுக்கு முன்பு போ ராட்டம் நடத்தப்பட்டது. அப் போது, இரண்டு மாதத்தில் இதனை சரிசெய்வதாக ஒப்பந்தம் போடப் பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கோரிக்கைக ளை நிறைவேற்றாத குருவித்துறை ஊராட்சி நிர்வாகத்தினைக் கண் டித்து வாடிப்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மே 13 வெள்ளிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருவித்துறை கிளையின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு என்.ஒஞ்சி தலைமை வகித்தார்.
ஒ.இளசு முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், ஒன்றியச் செயலாளர் ஏ.வேல்பாண்டி, ஒன்றி யக் குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் ஆகியோர் பேசினர். பின்னர் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் ஊராட்சி மன்ற அலு வலகம் முன்பு சமையல் செய்து போராட்டத்தினை தொடர்ந்து நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளிடம் இடத்தைப் பார்த்துவிட்டு வந்து பேச்சு வார்த்தை நடத்துமாறு போராட் டக்காரர்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள், காவல்துறையினர் சாக்கடை தேங்கியுள்ள இடத்தை பார்வை யிட்டு உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் தேங்கிய சாக்கடை நீரை அகற்றுமாறு உத்தரவிட்டார். பின்னர் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி, சோழவந்தான் காவல் ஆய்வா ளர் சிவபாலன், ஊராட்சி துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலையி லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், ஒன்றிய செயலாளர் ஏ.வேல்பாண்டி, புருசோத்தமன் மற்றும் தோழர் கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சு வார்த்தையில் 10 நாட்க ளுக்குள் சாக்கடை கட்டி தரப்படும் என்றும் மற்ற பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவதாகும் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலி கமாக வாபஸ் பெறப்பட்டது. மேலும் 10 நாட்களுக்குள் சாக்கடை கட்டி முடிக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என போராட்டகார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.