இலங்கையை போல கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் எகிறி யுள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.210-க்கும், ஒரு லிட்டர் பெட் ரோலின் விலை ரூ. 272-க்கும், டீசல் ஒரு விட்டர் ரூ.280க்கும் விற் பனையாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தத்தில் இறங்கி கல்லூரி செல்வதற்காக அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது நாகர்கோவில் - கோவை விரைவு ரயிலில் அடிபட்டு பாலகணேஷ் பரிதாபமாக உயிரிழந் தார். கழுகுமலையைச் சேர்ந்தபாலகணேஷ் கோவில்பட்டி கிருஷ்ண நகரில் அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கி லம் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான பிரச்சனை யை தீர்க்க பாதுகாப்பு செலவை ரூ. 33 கோடி யில் இருந்து ரூ.116 கோடி யாக உயர்த்தவுள்ளார் மெட்டா தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க்.
விப்ரோ தனது 80%-க்கும் அதிகமான பணியாளர்களுக்கு 87% மாறி ஊதியத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் நிகழ்ந்த ராணுவ வீரர் கொலை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை; நெருங்கிய உற வினர்களால் ஏற்பட்ட அடிதடியால் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்; ராணுவ வீரர் மரணத்தில் அரசியல் உள்நோக்கத்து டன் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என கிருஷ்ண கிரி எஸ்.பி. சரோஜ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தில்லியில் உள்ள கட்டி டங்களின் நில அதிர்வு நிலைத்தன்மை மோச மாக இருப்பதாகவும், பெரிய நிலநடுக்கம் ஏற் பட்டால், அதிக எண்ணிக் கையிலான உயிரிழப்பு கள் ஏற்படக்கூடும் என்ப தால் நிலநடுக்கத் தயார் நிலையை தற்போதே செய்ய வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
அதிமுகவின் இரண்டு தலைகளும் வெவ்வேறு திசையில் இருக்கின்றன. இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது. அந்த தாமரை இலை அதானி என்ற கோடீஸ் வரரை தாங்கி பிடிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது என ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி. பேசி யுள்ளார்.
அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 4-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை நடப்பு ஆண்டில் (2023) பல கொரோனா அலை கள் தாக்கும் என அந்நாட் டின் தலைமை மருத்துவ அதிகாரியான பால் கெல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.