states

img

பார் கவுன்சிலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

சென்னை, மார்ச் 8 – பார் கவுன்சிலில் பெண் வழக்கறி ஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் புதனன்று (மார்ச் 8) கொண்டாடப்பட்டது. இத னையொட்டி சென்னை உயர் நீதி மன்றம் வாயிலில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ‘சர்வதேச பெண்கள் தின கண்காட்சி’யை நடத்தி யது. இந்த கண்காட்சியை திறந்து  வைத்து சங்கத்தின் மாநிலத் தலைவர்  என்.ஜி.ஆர்.பிரசாத் பேசுகையில், 1958 ஆம் ஆண்டு தன்னுடன் ஒரே ஒரு  பெண் வழக்கறிஞராக படித்தார். வியக்கும் வகையில் மிக திறமை யாக வாதாடக்கூடிய அவர், பெண்ணாக இருந்ததால் நீதிபதியாக முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளியிட்டார்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் குறிப்பிடுகையில், “உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 246 நீதியரசர்களில் 11 பேர் மட்டுமே பெண்கள். தற்போது தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்சீப்க ளில் 60 விழுக்காடு பெண்களாக உள்ள னர். ஆண்டுதோறும் நாடு முழுவதும்   பதிவுசெய்யப்படும் வழக்கறிஞர்க ளில் 15 விழுக்காடு பெண்களாக உள்ள னர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கடந்தாண்டு 9ஆயிரம் பேர் பதிவு செய்தனர். அதில்  பெருமளவு பெண்களாக உள்ளனர். ஆனால் 25 பார் கவுன்சில் உறுப் பினர்களில் ஒரேஒரு பெண் வழக்கறி ஞர் மட்டுமே உள்ளார். இதில் மாற்றம்  கொண்டுவர ஆலோசித்து வருகி றோம். இதற்கான முன்னெடுப்புகளை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

மனிதமாண்பு

“சார்பு நீதிபதி பணியிடங்களில் 40 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பட்டியல் மற்றும் இட ஒதுக் கீடு காரணமாக அதிக நீதிபதிகள் கிடைக்கிறார்கள். அதேசமயம் சமத்து வத்தை, அரசியலமைப்பை மதிக்கிற வர்கள், சட்ட மாண்புகளை பாது காக்கிறவர்கள் நீதிபதியாக வேண்டும்” என்று கூறிய வழக்கறிஞர் அ.அருள்மொழி “ஹத்ராஸ் வழக்கில் ஏராளமான வீடியோ சாட்சியங்கள் இருந்தும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உ.பி., குஜராத்  போன்று தமிழகம் மாறாமல் பாதுகாக்க வேண்டிய கடமை வழக்க றிஞர்களுக்கு உள்ளது. பெண்கள் மீதான வன்முறை வயது வித்தியாச மின்றி நடக்கிறது. மனித மாண்புகள் செல்லரித்து வருவதை சரி செய்ய வேண்டும்” என்றார்.

பாலின சமத்துவம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா பேசுகையில், இந்தாண்டு  மகளிர் தினத்திற்கான கருப்பொரு ளாக ‘இணையத்தில் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவோம்’ என ஐ.நா. நிர்ணயித்துள்ளது. இணை யத்திலும், அறிவியல் தொழில் நுட்பத்திலும் பெண்களை தவறாக சித்தரிப்பதற்கு எதிராக குரல்  எழுப்ப அறைகூவல் விடுத்தார். மேலும் அவர் பேசுகையில், வரதட்சணை சரியென்றும், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் சொல்லக்கூடிய நீதிபதிகளும் உள்ளனர். எனவே, சட்டத்தை, பாலின  சமத்துவத்தை நிலைநாட்ட வழக்கறிஞர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்விற்கு சென்னை மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ எம்.பி.,  த.பார்வேந்தன் ( சமத்துவ  வழக்கறிஞர்கள் சங்கம்), சி.விஜய குமார் ( ஜனநாயகம் மற்றும் சமூக  நலன்களுக்கான வழக்கறிஞர் மையம்), சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், துணைத் தலைவர் ஜி.சம்கிராஜ், சென்னை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பா.ஹேமாவதி, எம்.சமந்தா உள்ளிட்டோர் பேசினர்.