வேலுர் விஐடி பல்கலை கழகம் பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் இணைந்து நீடித்த குளிர்ச்சி குறித்த கருத்தரங்கை விஐடியில் நடத்தின. இக்கருத்தரங்கை விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் துவக்கி வைத்தார். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். ஆர். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பாளர்கள், விஐடி இணை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.