தமுஎகச நிர்வாகிகள்- அமைச்சர் அஞ்சலி சென்னை, அக். 30 - “தமது கவிதைகள் மூலம், தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார் கவிஞர் தணிகைச்செல்வன்!”என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழா ரம் சூட்டியுள்ளார். தமுஎகச-வை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான தோழர் தணிகைச்செல்வன் ( வயது 90) அக்டோபர் 29 அன்று காலமானார். தாம்பரம் சானடோரியம் ஸ்ரீராம் காலனியில் உள்ள அவரது இல்லத் தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன்(தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை). ப.சு.பாரதி அண்ணா (செங்கல்பட்டு), மாநில கட்டுப்பாடு குழு உறுப்பினர் சி.சங்கர், தமுஎகச மூத்த தலை வர் சிகரம் ச.செந்தில்நாதன், பொரு ளாளர் சைதை ஜெ., நிர்வாகிகள் பிரளயன், மயிலை பாலு, இரா.தெ.முத்து, சிராஜூதீன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், கல்வி யாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘அலைகள்’ சிவம், வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சி.பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் அஞ்சலி தமிழக சிறுகுறு -நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், விசிக தலை வர் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சிபிஐ மூத்த தலைவர் சி.மகேந்திரன், எழுத்தாளர் தியாகு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் குரோம்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் இரங்கல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கவிஞர் தணிகைச் செல்வனின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கும், தமிழ்ச் சமூ கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரி ழப்பாகும். கவிஞர் தணிகைச்செல் வன், தமது கவிதைகள் மூலம், தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார்!” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.