states

முற்போக்காளர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் திரைக் கலைஞர் ராமு உடல் தகனம்

முற்போக்காளர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நாடக, திரைப்பட கலைஞர் ராமு உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், நாடக, திரைப்பட கலைஞருமான ‘பூ’ இராமு சென்னையில் திங்க ளன்று (ஜூன் 27) மாலை காலமானார். அவரது உடல் சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு  தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி, மார்க்சிஸ்ட் கட்சியின்  மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் செல்வசிங், கே.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன், சிபிஎம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பா.சு.பாரதிஅண்ணா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேல் முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாற்று ஊடக மைய கலைக்குழு , பேசு பறை கலைக்குழு, முகில் கலைக்குழு , சாரல் கலைக்குழு  உள்ளட்ட கலைக்குழுவை சார்ந்த கலைஞர்கள் பறை இசையுடன் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக ஊரப்பக்கம் மயானத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் தோழர் ராமுவின் உடலுக்கு மூத்த மகள் மகாலட்சுமி தீ மூட்டினார்.