டேராடூன், மே 8 - பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கேட்க, பள்ளிக்கு வராத மாணவர்களிடமிருந்து டேராடூனில் உள்ள பள்ளி ஒன்று தலா ரூ. 100 அப ராதம் வசூலித்த அராஜகம் அரங்கேறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ ஏப்ரல் 30 அன்று 100 எபிசோட்களை நிறைவு செய்தது. கடந்த மாத நிகழ்ச்சி யானது, 100-ஆவது எபிசோட் என்பதால், இதனை பெரிய அளவிற்கு விளம்பரப் படுத்தும் வகையில், நாடு முழுவதும் பள்ளி கள் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனொரு பகுதியாக, டேராடூனில் உள்ள ஜிஆர்டி நிரஞ்சன்பூர் அகாடமி யிலும் பிரதமரின் ‘மன் கி பாத்’ ஒலிபரப்ப ப்பட்டு உள்ளது. இதில் மாணவர்கள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. எனினும் அனைத்து மாணவர்களும் இந்த ‘மன் கி பாத்’தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இதனை எளிதாக எடுத்துக் கொள்ளாத பள்ளி நிர்வாகத்தினர், நிகழ்வில் கலந்துகொள்ளாத மாணவர்களின் பட்டி யலைத் தயாரித்து அவர்களது பெற்றோர் களுக்கு வாட்ஸ் ஆப்-இல் மெசேஜ் அனுப்பி யுள்ளனர். அந்த மெசேஜில் பிரதமர் மோடி யின் 100-ஆவது ‘மன் கி பாத்’ நிகழ்வை கேட்க வராத மாணவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனைச் செலுத்துமாறும் கூறியுள்ளனர்.
ஒருவேளை அன்றைய தினம் உடல் நிலை சரியில்லாமல் போயிருந்தால், அதற்கான மருத்துவச் சான்றிதழோடு பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கறார் காட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகத்தின் இந்த உத்தரவு, “மாண வர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தும் நிகழ்வு ஆகும்” என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினர். அவர்கள் அந்த பள்ளி நிர்வாகம் 100 ரூபாய் கேட்டதற்கான வாட்ஸ் ஆப் ஸ்க்ரீன்ஷாட் ஆதாரத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம், பெற்றோர் மற்றும் மாணவர் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் தேசியத் தலைவர் ஆரிப் கான் கவனத்திற்குச் செல்லவே, அவர், டேராடூன் முதன்மைக் கல்வி அதிகாரிக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறையானது, சம்பந்தப் பட்ட ஜிஆர்டி நிரஞ்சன்பூர் அகாடமி பள்ளி க்கு நோட்டீஸ் அனுப்பி 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது. “பள்ளிக்கு வராததற்கு காரணம் கூறு மாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் பள்ளி தரப்பில் ஆஜராகவில்லை என்றால், பள்ளி சார்பில் மாணவர்களிடம் பணம் கேட்டது உறுதியாகும். அதன்பிறகு துறை நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று முதன்மை கல்வி அலுவலர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.