திருப்பூர், மார்ச் 14– துணை வட்டாட்சியர் பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் பின்னடை வுப் பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதித்த வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு பிறப்பிக் கப்பட்ட வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கை அரசியல் அமைப்புச் சட்டத் துக்கு எதிரானது என்று பல தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அரசு உயர்மட்டக் குழு ஆய்வு செய்து அந்த சுற்றறிக்கையை ரத்து செய்தது. இது பற்றிய விபரம் வருமாறு: கோவை மாவட்டத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை துணை வட்டாட்சியர் பின்னடைவு காலி பணியிடங்கள் மற்றும் நடப்பாண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பட்டியல் வெளியிட்டார். இது வருவாய் நிர்வாக ஆணையர் சுற்ற றிக்கை அடிப்படையில் பட்டியலிடப்பட்ட தால் பட்டியலின வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வாய்ப்பு பாதிக்கப்பட்டது. எனவே இது இந்திய அரசியல் அமைப்பு 81ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரானது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழ்நாடு பட்டியல் வகுப்பி னர் மற்றும் பழங்குடியினர் நல ஆணை யம் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலை மையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்படி சுற்றறிக்கை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று முடிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்ட அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படியும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு தலித் விடு தலை இயக்கம் வரவேற்புத் தெரிவித்தி ருக்கிறது. அத்துடன் கோவை மாவட் டத்தில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து, 2004 முதல் 2021 ஆம் ஆண்டு முடிய திருத்திய துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் வட்டாட்சியர் பதவி உயர்வு அளிக்க வேண்டும், முந்தைய சுற்ற றிக்கை அடிப்படையில் பட்டியலில் இடம் பெற்று வட்டாட்சியர் பதவி உயர்வு பெற் றவை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தலித் விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு எஸ்சி., எஸ்டி., அலுவலர்கள் நலச் சங்கம் ஆகியவை கோரியுள்ளன.