பாக்தாத், மே 31- இராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் என்ற செய்திகள் வந்தாலும், ஆலோசனை தரும் வேலை களைச் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பல்வேறு படைத்தளங்களை அமெரிக்கப் படைகள் வைத்திருக்கி ன்றன. அத்தகைய தளம் ஒன்று அயின் அல் அசாத் பகுதியில் விமானப் படைக்காக வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தில் இருந்து 160 கி.மீ. தொலை வில் அமைந்துள்ள இந்த முகாம் மீது ஐந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன. உயிர் மற்றும் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இந்தத் தாக்கு தலுக்கும் இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் இராக்கின் வான்வெளியில் சுற்றித் திரிந்துள்ளன. இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.