தஞ்சாவூர், ஏப்.18 - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின், தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் திங்கட்கிழமை தஞ்சையில் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான ஏ.லாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலச் செயலாளர்கள் அ.பழநி சாமி, கே.பக்கிரிசாமி, அ.து.கோதண்டன், மாநில துணைத் தலைவர்கள் பி.வசந்தாமணி, சி.துரைசாமி, ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஊரக வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். நடப்பு நிதி யாண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.25,000 கோடியை குறைத்து நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 14 கோடி தொழிலாளர்கள் நாடு முழுவதும் வேலை கோரி பதிவு செய்துள் ளனர். இவர்களின் குடும்பம் ஒன்றிற்கு 100 நாட்கள் வேலை தர முடியாது. நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஊதியம் ரூ.4000 கோடியை கழித்து பார்த்தால், 16 நாட்களுக்கு மட்டுமே வேலை தர முடியும் என்ற நிலையில், ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. கிராமப்புற விவசாய வேலைகள் குறைந்து, முற்றிலும் இயந்திரமயமாகி வரும் சூழலில் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வேலையை சீர்குலைக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை குறைத்து ஒன்றிய அரசு துரோகம் செய்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு ஊரக வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்த தற்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. தொழிலாளர்களின் தினக்கூலி உயர்த்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டிய நாடாளு மன்ற நிலைக் குழு, இந்த திட்டத்தை கேரள மாநிலத்தில் சிறப்பாக செயல்படுத்துவதை பாராட்டியுள்ளது.
தமிழகத்தில் ஊரக வேலைத் திட்டத்தில் காலை 7 மணிக்கு வேலைக்கு வந்து புகைப்படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் வேலை தருவோம் என்று ஊராட்சி நிர்வாகம் மிரட்டுகிறது. இதனால் பெண்களின் அன்றாட வீட்டு வேலைகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பராமரிப்பு செய்ய முடியாமல் திணறுகின்றனர். எனவே வேலைக்கு வரும் நேரம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வாறு காலை 9 மணி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்தினால்தான் வேலை தரப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் தொழிலாளர்களை நிர்ப்பந்தம் செய்கிறார்கள். இது ஊரக வேலை சட்டம் 2005ன் படி சட்ட விரோதமாகும். எனவே நிபந்தனையற்ற முறையில் ஜாப் கார்டு வழங்கி வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு 50 இடங்களில் நெல் கொள்முதல் கிடங்குகள் கட்டுவதற்கு ஊரக வேலை திட்டத்தின் நிதியிலிருந்து ரூ.17 கோடியை எடுத்துக்கொள்ளும், அரசாணை 48-ஐ தமிழக அரசு கைவிட வலியுறுத்து கிறோம். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக சொத்துவரி 25 முதல் 200 விழுக்காடு வரை உயர்த்தியதை ஏற்க முடி யாது. கொரோனா காலம் நீடிக்கும் சூழலில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ள நிலையில் சொத்து வரியை உயர்த்தி யிருப்பது நியாயமல்ல. ஆகவே தமிழ்நாடு அரசு சொத்துவரி உயர்வை கைவிட வலியுறுத்துகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.