states

சிலம்பாட்ட வீரர்களுக்கு இடஒதுக்கீடு குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் உதயநிதி

புதுக்கோட்டை, மே 26-  சிலம்பாட்ட வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: புதுக்கோட்டையில் பல நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில திட்டங்களில் தொய்வுகள் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்ய அமைச்சர்கள், ஆட்சியரிடம் சொல்லியிருக்கிறேன். முதல்வரிடமும் விவரங்களைத் தெரிவிப்பேன். ஜல்லிக்கட்டு போட்டி, கலாச்சாரப் பட்டியலில் இருப்பதை விளையாட்டுப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். சிலம்பாட்ட வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உள்விளையாட்டு  அரங்கம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டு முழுமை பெறாமல் இருக்கிறது. இது குறித்து விரிவான அறிக்கையை ஆட்சியரிடம் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.