சென்னை, நவ.20- கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அரசு வேலை தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்ட பின்னரும், இதுவரை அரசு மனம் இரங்கவில்லை. நவம்பர் 22 ஆம் தேதி, அரசு மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை, தமிழக முதல்வரின் கைகளால் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.