states

img

பிரபல கல்வியாளர் மேரிராய் காலமானார்

கோட்டயம், செப்.2- பாலின சமத்துவத்துக்காகப் போராடியவரும் புகழ்பெற்ற கல்வி யாளருமான மேரி ராய், கேரளாவின் கோட்டயத்தில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 89. இவர் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் தாயார் ஆவார். மேரி ராய் கோட்டயத்தில் பிறந்தவர். அவரது தந்தை, பி.வி.ஐசக், இங்கி லாந்தில் பயிற்சி பெற்று, பீகாரில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஒன்றிய வேளாண் பல்கலைக்கழ கத்தில் பூச்சியியல் நிபுணராகப் பணி யாற்றினார். தில்லி மற்றும் சென்னை யில் தனது கல்வியை முடித்த பிறகு, மேரி ராய் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவருக்கும் ராஜீப் ராய் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பின்னர் இருவரும் அஸ்ஸாமுக்கு குடிபெயர்ந்தனர்.  ரஜீப்ராய்  ஒரு தேயிலை தோட்டத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார். மறைந்த மேரிராய்க்கு லலித் மற்றும் அருந்ததி ஆகிய மகள்கள் உள்ளனர். இவர் 1986- ஆம் ஆண்டு  கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெண் களுக்கு குடும்பச் சொத்தில் சம உரிமை யை உறுதி செய்யும் போராட்டத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றவர் ஆவார்.  கல்வியாளர் மேரி ராயின் மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது, கிறிஸ்தவ பெண் களின் சொத்துரிமைக்கான போராட்டத் தில் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்ட வர் மேரிராய் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.