சென்னை, ஜன.23- அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டத் தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 60 ரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் நிலையங்களை நவீனமய மாக்கும் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. இதன் படி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை யைப் பொறுத்தும், வசதிகளின் தேவை யை கருத்தில் கொண்டு பெருந்திட்டம் தயார் செய்யப்படும். மிக முக்கியமாக குறைந்தபட்ச அத்தியாவசிய வசதி களை கருத்தில் கொண்டு ரயில்நிலை யங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும். ரயில் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக மேம்பாடு மற்றும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும். மேலும், தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளி களுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டில் 60 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதன் விவரம்: சேலம் கோட்டம்: மேட்டுப்பாளை யம், கோவை வடக்கு, திருப்பூர், போத்தனூர், ஈரோடு, சேலம், நாமக்கல், ஊட்டி, குன்னூர், கரூர், பொம்மிடி, சின்ன சேலம், திருப்பத்தூர், சமால்பட்டி, மொரப்பூர் மதுரை கோட்டம்: புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்குடி, பர மக்குடி, அம்பாசமுத்திரம், புனலூர், திருச்செந்தூர், தென்காசி, மணப் பாறை, சோழவந்தான், பழனி, விருது நகர், கோவில்பட்டி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், திருச்சி கோட்டம்: தஞ்சாவூர், திரு வாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப் பாதிரிப்புலியூர், சிதம்பரம், அரி யலூர், திருவரங்கம், திருவண்ணா மலை, விருத்தாசலம், வேலூர் கண் டோன்மென்ட், போளூர், லால்குடி சென்னைக் கோட்டம்: கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருத் தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர், பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு பெருந்திட்டம் தயார் செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த பெருந்திட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.