சென்னை,ஜன.19- அறிவியலுக்கு புறம்பாக பேசி வரும் மெட்ராஸ்-ஐஐடி இயக்குநர் காமகோடியின் பேச்சுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது. மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெற்ற “கோ” (பசு) பூஜையில் சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்று பேசினார். அதில் கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது என மூடநம்பிக்கைகளை மக்களிடையே புகுத்தும் நவீன அறிவியலுக்கு புறம்பான கருத்தை பேசியுள்ளார். அறி வியலுக்கு புறம்பான தனது கருத்தி னை திரும்பப்பெற வேண்டும். ஐஐடி நிர்வாகம் காமகோடியை இயக்குநர் பெறுப்பிலிருந்து நீக்க வேண்டும். காமகோடி, மெட்ராஸ் ஐஐடியின் இயக்குனராக பெறுப்பேற்றது முதல் அறிவியலுக்கு புறம்பான, நடை முறைக்கு ஒவ்வாத விஷயங்களை பொதுவெளியில் பேசுவதோடு, மாணவர்கள் விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். ஐஐடி வளாகத்தில் முற்போக்கு பேசும் மாணவர்களின் குரல் வளையை நசுக்குபவர், காசி தமிழ்ச்சங்க நிகழ்வுகளை வளாகத் திற்குள் நடத்துவது, அதில் பங்கேற்க மாணவர்களை தயார் செய்வது என பக்திச்சார்புடன் நடந்து கொள்வதும், புராண ரீதியிலான கருத்துகளை அவ்வப்போது பேசி வருவதும் என ஆர்.எஸ்.எஸ்.சின் பிரச்சார கழகமாக மெட்ராஸ் ஐஐடி-யை மாற்றி வரு கிறார். விஞ்ஞான அறிவியலுக்கு புறம்பான, மதச்சார்புடைய கருத்துகளை தொடர்ந்து பேசிவருவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு முறை யல்ல. இவரைத்தான் ஒன்றிய அரசாங்கம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு சுகாதரத்துறை சார்பில் உறுப்பினராகவும் நியமித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. உயர் தொழில்நுட்ப பயிற்சி கழகத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தொடர்ந்து பேசிவரு வதோடு, அதனை ஊக்குவித்து செயல்படும் காமகோடியை மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.