திருப்பூர் ஜன 14 - திருப்பூரில் முகில் கிட்ஸ் மற்றும் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யா லயா பள்ளிகள் சார்பில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் அண்ணாநகர் குமரன காலனி பகுதியில் உள்ள முகில் கிட்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர் கள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவ ரும் இணைந்த மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை பள்ளி மைதானத்தில் சிறப்புடன் நடை பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து மதத்தைச் சார்ந்தவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். நிகழ்விற்கு பள்ளியின் செயலாளர் ராணி ராமமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் 1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி ராமசாமி, காவல் துறை சார்பில் மொகரம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பொங்கல் விழாவோடு மாணவர்கள், பெற்றோர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்று பரிசுகளை அள்ளிச் சென்றனர். இதே போன்று அங்கேரிபாளையம் பகுதியில் செயல்ப டும் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மத நல்லிணக்க பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.