states

img

போதைக்கு எதிரான பிரச்சாரப் பாடல் வெளியீடு

திருப்பூர், மார்ச் 21-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் போதைக்கு எதிரான பிரச்சார பாடல் திங்களன்று திருப்பூரில் வெளி யிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை வாலிபர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தியாகி பழனிசாமி நிலை யத்தில் போதைக்கு எதிரான பிரச்சார  பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்  தலைவர் எஸ்.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. வடசென்னை, இராயபுரம் பகுதி செயலாளர் ச.நீதிதேவன் எழுதிய போதைக்கு எதிரான  பாடலை வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செ.முத்துகண்ணன் வெளியிட்டார். வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன்  பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், வாலிபர் சங்க முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, மாற்றுத்திறனாளிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் டி.ஜெயபால்,  வாலிபர் சங்க மாநில பொருளாளர் கே.எஸ்.பாரதி, மாநில நிர்வாகிகள் செ.மணிகண்டன், செல்வராஜ், மாவட்ட தலைவர் எஸ்.அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.