சென்னை, ஆக.31- இந்துசமய அறநிலையத்துறைக் குச் சொந்தமான 8 கோவில்களின் ரூ.30.90 கோடி மதிப்பிலான நிலங்களை ஒரேநாளில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில் களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரு கின்றன. அந்த வகையில் தூத்துக்குடி, நாகப் பட்டினம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 8 கோவில் களுக்கு சொந்தமான ரூ.30.90 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் ஆக்கிர மிப்பிலிருந்து மீட்கப்பட்டு கோவில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமான 22 ஏக்கர் 48 சென்ட் புன்செய் நிலம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், சிறுபுலி யூர் கிருபா சமுத்திர பெருமாள் கோவி லுக்குச் சொந்தமான 24 ஏக்கர் நன்செய் நிலம் , திருப்பள்ளிமுக்கூடல் கிராமம் தியாகராஜ சுவாமி கோவிலுடன் இணைந்த அபிசேகக் கட்டளைக்குச் சொந்தமான 19 ஏக்கர் 54 சென்ட் நன்செய் நிலம், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு கோபாலபெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் 67 சென்ட் நிலம், பொன்மலை குமாரசுவாமி கோயி லுக்குச் சொந்தமான 22 ஏக்கர் 91 சென்ட் நிலம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், அய்யம்பாளையம் ஏரி கருப்பண்ணசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 23 வீடுகள் உள்ள 6 ஏக்கர் புன்செய் நிலம், உத்தமபாளையம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்த மான ஒரு வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ் வரசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 14 ஏக்கர் புன்செய் நிலம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இவற்றை வருவாய் மற்றும் காவல் துறையினர் உதவியோடு இந்துசமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.