states

அரசின் பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு ஏமாற்றமே!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,நவ.4-  அரசின் பால் கொள்முதல் விலை  உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிக் கிறது என்று தனது அதிருப்தியை தெரி வித்துள்ள  தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம், மறுபரிசீலனை செய்து விலையை உயர்த்த வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியளார்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.முகமதுஅலி, பொதுச் செயலாளர் பி.பெருமாள் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக, தமிழ்நாடு அரசி டமும் ஆவின் நிர்வாகத்திடமும் பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.10 கொள் முதல் விலை உயர்த்த கேட்டு கடந்த 2  வருடங்களாகப் போராடி வரு கிறோம். இதர முக்கிய கோரிக்கை களையும் முன் வைத்து வருகிறோம்.  

இதற்கிடையில், தற்போது பால்வளத் துறையின் மாநில இணையத்தின் நிர்வாக இயக்குநர் பெயரில் 1 லிட்டர்  பாலுக்கு ரூ.3 கொள்முதல் விலையை  உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொள்முதல் விலை உயர்வால் ஆவினுக்கு ஏற்படுகிற இழப்பு சுமார் ரூ.400 கோடிக்கு மேல்  ஏற்படுவதை தமிழ்நாடு அரசு மானிய மாக வழங்குவது குறித்து எவ்வித அறி விப்பும் இல்லை. 2019 ஆம் வருடம் ஆகஸ்டில் அப் போது இருந்த தமிழ்நாடு அரசு, பசும்பா லுக்கு ரூ.4 உயர்த்தி 1 லிட்டர் ரூ.32 க்கும், எருமைப்பாலுக்கு ரூ.6 உயர்த்தி  ரூ.41, எனவும் அறிவித்தது. இடைப்பட்ட காலத்தில் கால்நடைத்தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் 1 லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42ம்,  எருமைப்பாலுக்கு ரூ.51ம் கேட்டி ருந்தோம். இதர சங்கங்களும் இதே  கோரிக்கையை முன்வைத்திருந்தன. இந்நிலையில் ரூ.3 மட்டும் உயர்த்தியி ருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. எனவே, இந்த கொள்முதல் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து  விலையை மேலும் உயர்த்தி அறிவிக்க  முன்வர வேண்டுமென்று வலியுறுத்து கிறோம். ஆரம்ப சங்கங்களின் செயல் பாடுகளுக்கு தற்போதுள்ள 1 லிட்ட ருக்கு ரூ.1.25லிருந்து, 50 காசுகள் உயர்த்த வேண்டும். 10 ஆயிரம் ஆரம்ப  சங்கங்களின் பணியாளர்கள் 25 ஆயிரம் பேரின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்  என்ற கோரிக்கையையும் முன்வைத்தி ருந்தோம்.

ஏற்கனவே, ஆவின் பால் விற்பனை  விலையில் ரூ.3 குறைக்கப்பட்டதால் ஆவினுக்கு 1 வருடத்திற்கு ரூ.300 கோடி  நட்டம் ஏற்படுகிறது. தற்போது கொள்முதல் விலை ரூ.3 உயர்வினால் சுமார் ரூ.400 கோடி கூடுதல் செலவு ஆவினுக்கு ஏற்படுகிறது. இதற்கும் தமிழ்நாடு அரசு மானிய அறிவிப்பு இல்லை. மொத்தம் ரூ.700 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டால் ஆவின் நிறுவனம் எப்படி செயல்பட முடியும். தற்போது தனியார் நிறுவனங்கள், பாலுக்கு கொள்முதல் விலை உயர்வு ரூ.5லிருந்து ரூ.10 வரை கொடுப் பதால் மொத்தம் இருந்த சுமார் 12 ஆயி ரம் ஆரம்ப சங்கங்களில் தற்போது 8  ஆயிரம் சங்கங்கள் தான் ஆவினுக்கு பால் வழங்குகின்றன. பல சங்கங் கள் மூடப்பட்டு வருகிறது. பால் வளத்து றையின் தற்போதைய அரசின் அணுகு முறையால் ஆரம்ப சங்கங்களும், ஆவின் நிறுவனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. ஆவினின் செயல்திறனை உயர்த்து வதன் மூலமும், அரசின் உதவியின் மூலம் ஈடு செய்யப்படும் என நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ள அறிவிப்பு நம்பும்படியாக இல்லை. ஏனென்றால் முதலமைச்சரோ, பால்வளத்துறை அமைச்சரோ இதுகுறித்து அறிவிப்பு செய்யவில்லை. இச்சூழலில் பாலின் கொள்முதல் விலை உயர்வுடன் இதர  கோரிக்கைகள் குறித்தும் தாமதமில்லா மல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கங்களை அரசு அழைத்துப்பேசி  சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டு மென்று தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.  அனைத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், விவசாய சங்கங்கள், ஆரம்ப சங்க பணியாளர் சங்கங்கள்  ஆகியவற்றுடன் கலந்து பேசி அடுத்த கட்டமாக கூட்டாக நடவடிக்கைகளை தொடரவிருக்கிறோம் . இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.