states

img

வாழ்க்கையின் யதார்த்தங்கள் கதைகளாக... - செ. தமிழ்ராஜ்

சிறுகதை வாசிப்பு என்பது சின்ன சின்ன சம்பவங்களின் மீச்சிறு நினைவு கூறல் எனலாம். பேருந்து பயணத்தில் ஒரு நிறுத்தத்திற்கும், மறு நிறுத்தத்திற்கும் இடைப்பட்ட கால அளவே ஒரு நல்ல சிறு கதையை தீர்மானித்து விடுகின்றன. சிறுகதைகள் வாயிலாகவே தமிழில் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் உருவான வரலாறும் இங்கு உண்டு. ஆயிரம் பக்கங்களில் எழுதியும் நினைவில் நிற்காத நாவல்களும் உண்டு. ஆறே பக்கத்தில் காலந்தோறும் பேசப்படும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் அக்னி பிரவேசம் போன்ற சிறுகதைகளும் உண்டு.  கதையோ, கவிதையோ, நாவலோ, உருவத்தில் பருத்திருந்தாலும் அதன் உள்ள டக்கத்தாலேயே பேசுபொருளாய் மாறும். அந்த வகையில் தமிழ்ச் சிறுகதை உலகின் புதிய வரவாக எழுத்தாளர் இரமணி ஷர்மா அவர்கள் காண்பன யாவுமாய் எனும் தலைப்பில் 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பை தமிழ் மொழிக்கு தந்திருக்கிறார். இந்தச் சிறு கதைகள் யாவும் கற்பனைக் கதைகள் அல்ல. வாழ்வின் சம்பவங்களி லிருந்து, யதார்த்தத்திலிருந்து,எழுதியி ருக்கிறார். படைப்பாக்க மொழியும் சுவை படச் சொல்லும் திறனோடும் ஒவ்வொரு கதைகளையும் அனுபவத்தின்  பாடுபொரு ளாக நமக்கு தந்திருக்கிறார். மிகையற்ற கதைப் போக்கும் அதில் உலவுகின்ற மனிதர்களும், காட்சிகளும், நமக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறார்கள்.  வேடிக்கை மனிதரைப் போல காண்பன  யாவையும் கதைகளாய் காட்சிப்படுத்தி யிருக்கிறார். முதல் கதையான ஜீவிதம் பரிதவிக்கும் தாய்மைப் பண்பு மனிதர்களுக்கு மட்டும் அல்ல கோழிகளுக்கும் உண்டு என்பதை, நண்பனது அறைக்குள் சென்று கவனக்குறைவால் கோழிக்குஞ்சை காக்கை தூக்கி சென்று விட காரணமாகி விடுகிறார். குற்ற உணர்வோடு திரும்பி செல்கையில் மாடிக் கைப்பிடிச்சுவற்றில் அமர்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் கோழியின் வழியாக தாய்மையின் உன்ன தத்தை மிக உணர்வுப்பூர்வமாக நமக்கு வரைந்தளிக்கிறார். ஒரு நல்ல கவிதையை வாசித்த உணர்வும் ஏற்படுகிறது. புராணக் கதைகளின் மறுவாசிப்பாக பாஞ்சாலி சபதத்தை ஏற்கனவே பாரதியார் செய்ததுதான். அதை மறுபடியும் புனை வெழுத்து ஆக்கியிருக்கிறார். வாசிக்கும் போது சரஸ்வதியின் சபதம் திரைப்பட வசனங்கள் மாதிரியே ஒலிப்பது தற்செய லானது அல்ல என்று நினைக்கின்றேன். அந்த எழுத்தின் நடையை மாற்றி யிருக்கலாம். நல்ல ஓவியர், சிறந்த கவிஞர், அருமை யான சிறுகதையாசிரியர், அழகிய அட்டைப் படத்துடன்  மிகச் சிறப்பாக அகநி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. காண்பன யாவையும் சொற்களால் காட்சிப்படுத்தியுள்ள எழுத்தா ளர் இரமணிஷர்மா பாராட்டிற்குரியவர். தொடர்ந்து எழுத வாழ்த்துகள். காண்பன யாவுமாய் (சிறுகதைத்

தொகுப்பு) ஆசிரியர் : இரமணிஷர்மா பக்கம் 136 / விலை 150 பதிப்பகம் : அகநி வெளியீடு