தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெரும் மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட தூத்துக் குடி, திருநெல் வேலி மற்றும் தென் காசி ஆகிய மாவட் டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 22, 23 தேதிகளில் மாநிலப் பொதுச்செய லாளர் சாமி.நடராஜன் தலைமையில், அகில இந்திய இணைச் செயலாளர் டி. ரவீந்திரன், மாநிலப் பொருளாளர் கே.பி. பெருமாள், தூத்துக்குடி மாவட்டத் தலைவர்கள் புவிராஜ், ராகவன், நெல்லை மாவட்டத் தலைவர்கள் மாய கிருஷ்ணன், முருகன், தென்காசி மாவட் டச் செயலாளர் கணபதி மற்றும் மூன்று மாவட்ட நிர்வாகிகளும் மழையால் பாதிப்புக்குள்ளான பல்வேறு கிரா மங்களுக்குச் சென்று, விளைநிலங் களை பார்வையிட்டு, பாதிக்கப்பட் டுள்ள விவசாயிகளை சந்தித்து கோரிக் கைகளை கேட்டோம், எந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண் டோம்.
தூத்துக்குடி
குறிப்பாக தூத்துக்குடி மாவட் டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதி களில் இன்னும் 10 தினங்களில் அறு வடைக்கு தயாராக இருந்த உளுந்துப் பயிர், பாசிப்பயிர் ஆயிரக்கணக்கான ஏக்கர் தண்ணீரில் மூழ்கி தற்போது செடியிலேயே முளைத்து போய் உள் ளது. மக்காச்சோளம், கம்பு, பருத்தி, மிளகாய், சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளது. தாமிரபரணி ஆற்று நீர் பாசனப் பகுதியில் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் ஆற்றிற்கு அருகில் உள்ள விளை நிலங்களில் 3 அடி உயரத்திற்கு மண் திட்டு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை மரங்கள் அடி யோடு சாய்ந்து முற்றிலும் அழிந்து விட்டன. மாவட்டத்தில் பல பாசனக் குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மானாவாரிப் பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற் பட்டுள்ளது. ஆற்றுப் பாசனப் பகுதி யில் உள்ள நெல், வாழை உள்ளிட்ட பயிர்களும் பெரும் பகுதி தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழிந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் தாமிர பரணி ஆற்றின் இரண்டு புறமும் விளை நிலங்களில் பல இடங்களில் 3 முதல் 4 அடி உயரத்திற்கு மண் திட்டுக்கள் ஏற் பட்டுள்ளது. சீவலப்பேரி அருகே நொச்சிக்குளம் கிராமத்தில் விளை நிலங்களில் பெருமளவு மண் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் நெற் பயிர்கள் முழுவதுமாக பாதிக்கப்பட் டுள்ளன. இம்மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பெரிய பாசனக் குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாங்குநேரியிலுள்ள பெரிய பாசனக் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பால் 200 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள் ளன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் வட்டாரம் முழுவதும் உளுந்து, பாசிப்பயிர் முற்றிலும் செடியிலேயே முளைத்து போயுள்ளது. உளுந்து மற் றும் பாசிப்பயிர் நிறம் மாறிப்போய் விட்டது. கடையம் ஒன்றியம் பாப்பான் குளம் பகுதியில் சேனைக் கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் நெற்பயிர்களும், ஆலங்குளம் பகுதிகளில் நெற்பயிர் கள் பாதிக்கப்பட்டுள்ளன. விருதுநகர், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களி லும் ஒரு சில பகுதிகளில் பயிர் பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு நிவாரணப் பணி களை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரணம் வழங் கிட வேண்டும்.
வரலாறு காணாத வகையில் பாதிக் கப்பட்டுள்ள தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட் டங்களாக ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உட்பட அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் அவர்கள் பேரிடர் பாதிப்பு என்று அறிவிக்க முடியாது என கூறியுள்ளதை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வன்மையாக கண் டிக்கிறது. பெரும் பாதிப்பிற்குள்ளான இப்பகுதிகளை பேரிடர் பாதிப்பு ஏற் பட்ட பகுதிகள் என்று அறிவித்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம். பெரும் மழைவெள்ள பாதிப்புகளால் இப்பகுதியில் விவசாயம் பேரழிவை சந்தித்துள்ளது. இதிலிருந்து இவ்விவ சாயிகளை ஓரளவேனும் பாதுகாப்ப தற்கு ஒன்றிய அரசிடம் தேவையான நிதி யை மாநில அரசு தனது முழு சக்தியை பயன்படுத்தி போராடி பெற்றிட வேண்டும்.
மாநில அரசு கீழ்க்கண்ட கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.
1நெல் மற்றும் மானாவாரிப் பயிர் களுக்கு தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
2பயிர் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் உடன் கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர் களுக்கும் விடுபடாமல் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
3மழை வெள்ளத்தால் விளை நிலங்களில் ஏற்பட்டுள்ள மண் திட்டுக்களை அரசே அப்புறப் படுத்தி விளை நிலங்களை சரி செய்து தந்திட வேண்டும் (அல்லது) அதற்கான தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.
4தனியார் நிலங்கள், கோயில், மடம், அறக்கட்டளை நிலங்களில் குத்தகை சாகுபடி செய் துள்ள விவசாயிகளுக்கே பயிர் பாதிப்பிற்கான நிவாரணத்தை வழங்கிட வேண்டும்.
5உடைப்பு ஏற்பட்டுள்ள அனைத்து நீர் நிலைகளையும் செப்பனிட்டு கரைகளை பலப்படுத்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக இந்த பணிகளை மேற் கொள்ள வேண்டும்.
6பயிர்க் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்புத் தொகை காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக வழங்கிடுவதற்காக நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டு, விவசாயிகளுக்கு காப் பீட்டுத் தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சாமி. நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.