புதுச்சேரி, அக். 13- புதுவை அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி சட்டமன்றம் அருகில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மதிய சமையல் கூடம் மூலம் தரமான உணவை சமைத்து வழங்க வேண்டும். அக்ஷய பாத்திரா உடன் உள்ள ஒப்பந் தத்தை ரத்து செய்து, முட்டையு டன் கூடிய தரமான மதிய உணவை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். குலக்கல்வி முறையை கொண்டு வரும் நோக்கத்தோடு அமல்படுத்தப் படும் புதிய கல்விக் கொள் கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோபி, சத்யா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் நேரு வீதி மிஷன் வீதி வழியாக ஊர்வல மாக வந்து சட்டமன்றம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.