states

கவிஞர் கலை இலக்கிய நூல் விமர்சனப் போட்டி முடிவுகள் வெளியீடு

தேனி, ஜன.5- கவிஞர் கலை இலக்கியா நூல் விமர்  சனப் போட்டி- 2022 முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம், அறம் கிளை சார்  பாக 2019 ஆம் ஆண்டு முதல் கவிஞர் கலை இலக்கியா நூல் விமர்சனப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.  நான்  காவது ஆண்டு விமர்சனப் போட்டியில் “காலத்தில் கதைகள்” என்ற தலைப்பில் 2020 – 2022 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த சிறுகதை நூல்களுக்கான விமர் சனப் போட்டி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 130-க்கும்  மேற்பட்ட கட்டு ரைகள் வந்திருந்தன.  விமர்சனப் போட்டியின் நடுவர் - எழுத்தாளர். ம. மணிமாறன் ( மாநில துணைச் செயலாளர், தமுஎகச) அனைத்துக் கட்டுரைகளையும் ஆய்வு  செய்து, சிறந்த பரிசுக்குரிய ஐந்து கட்டு ரைகளை தேர்வு செய்துள்ளார். போட்டி  முடிவுகளை கிளையின் தலைவர் அ. உமர் பாரூக், செயலாளர் பொ.பிரேமா வதி, பொருளாளர் சி.பேரின்பராஜன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் அறி வித்தனர். முதல் பரிசு : பா.கஜலட்சுமி, சென்னை (குதிரைக்காரனின் புத்தகம்  – மஞ்சுநாத்), இரண்டாம் பரிசு: சு. இளவரசி, சிவகங்கை  (அகல்யாவுக்கு ஒரு ரொட்டீ.. அ.கரீம்), மூன்றாம் பரிசு: ஷாராஜ், பொள்ளாச்சி  (துயிலாத ஊழ் ஈழச்சிறுகதைத்தொகுப்பு). கூடுதல் பரிசுகள்:1.எஸ். பர்வின் பானு,  சென்னை  (ஹலால் - ஜாகிர் ராஜா ),2.இளவல் ஹரிஹரன், மதுரை (நாய்சார் - ஐ.கிருத்திகா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.