சென்னை, ஜூன் 22- கடலோர மேலாண்மைத் திட்ட வரைவு அறிக்கை மீது வருகிற ஆகஸ்டு 4 ஆம் தேதிக்குள் பொது மக்கள் தங்க ளது கருத்துக்களை கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு, நில பயன்பாட்டு வரைபடங்கள் ஆகி யவை தற்போது தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின்படி, இதுதொடர்பாக அரசுத் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள், பொதுமக்களின் ஆலோசனைகள், கருத்துகளை அறிவதற்காக, சுற்றுச் சூழல்துறையின் http://www.environment.tn.gov.in என்ற இணையதளத்திலும், இத்துறையின் ENVIS மையத்தின் http://www.tnenvis.nic.in-லும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்கள், பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இந்த திட்ட வரைவு அறிக்கை குறித்து கருத்துகள், ஆலோசனையை, ஆக.4 ஆம் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் எழுத்து மூலம் இத்துறைக்கு அனுப்ப லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.