states

img

மாதர் சங்க மாநாட்டில் 5 நூல்கள் வெளியீடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 13ஆவது தேசிய மாநாட்டில் ஐந்து நூல்களும் நாட்குறிப்பும் வெளியிடப்பட்டன. சிந்தா வெளியிட்ட இரண்டு நூல்களும், சங்கத்திற்காக தயாரிக்கப் பட்ட மூன்று சிறு புத்தகங்களும் வெளி யிடப்பட்டன. பி.கே. ஸ்ரீமதி எழுதிய ‘கேரளாவை வழிநடத்திய பெண்கள்’ புத்தகத்தை பிருந்தா காரத் வெளியிட்டார். எம்.சி ஜோசபின் எழுதிய ‘பெண்கள்-பாலியல்-அறநெறி’ நூலின் இரண்டாம் பதிப்பை சுபாஷினி அலி வெளி யிட்டார். அனைத்திந்திய மாதர் சங்கம்  உருவாக்கம்: அய்ட்வா ஒன்று மற்றும் இரண்டாம் தேசிய மாநாட்டு நட வடிக்கைகள்’ என்ற சிறு புத்தகத்தை அர்ச்சனா பிரசாத் மினோதி சாட்டர்ஜி வெளியிட சாயா, விமலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘கும்னாம் வீராங்கனைகளே’ (தெரியாத பெண் போராளிகள்)’ என்னும் புத்தகத்தை மஞ்சீத் ராதி  வெளியிட்டார். சந்திரகலா பாண்டே, மாலினி பட்டாச்சாரியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். வரதட்சணை-பாலியல் வல்லுறவு தடை சட்ட உரு வாக்கத்தின் ஆரம்ப கால போராட்டங் கள் என்கிற நூலை பி.சதிதேவி வெளி யிட சுதா பெற்றுக் கொண்டார். மாதர்  சங்க டைரி 2023 மாலினி பட்டாச்சார்யா  வெளியிட ஷர்பானி சர்க்கார் பெற்றுக் கொண்டார்.