states

img

நான்கு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைக்க பொது இன்சூரன்ஸ் நிலைக்குழு செயலர் சஞ்சய் ஜா வலியுறுத்தல்

மதுரை, செப்.25- எல்ஐசி உள்ளிட்ட பொதுத்  துறை இன்சூரன்ஸ் நிறுவனங்க ளைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்தும் பொது இன்சூரன்ஸ் ஊழி யர்கள் நாட்டைப் பாதுகாக்கும்  போராட்டத்தையும் தொடர்ந்து நடத்து வார்கள் என பொது இன்சூரன்ஸ் நிலைக்குழு செயலாளர் சஞ்சய் ஜா  உறுதியளித்தார். மதுரையில் ஞாயிறன்று தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் 18-ஆவது மாநாட்டில்  கலந்து கொண்ட அவர் செய்தியாளர்  களிடம் கூறியதாவது: பொன் இன்சூரன்ஸ் ஊழியர் சங்  கம் எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை  நிறுவனங்களை பாதுகாப்பது, இன்சூ‘ரன்ஸ் நிறுவனத்தின் பங்கு களை விற்பதை தடுத்து நிறுத்து வது, ஊழியர்களின் ஊதிய உயர்வு  பிரச்சனைகளை தீர்ப்பது, நாட்டைப்  பாதுகாப்பது என்ற நான்கு பிரதான கோரிக்கைகளை மாநாடு விவா தித்தது.

இன்றைக்கு பொறுப்பிலுள்ள ஒன்றிய அரசு “ஆத்ம நிர்பார்” என்ற  திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறு வனங்களை ஒழிக்கப் பார்க்கிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனி யார் கைகளுக்கு செல்லும் சூழலை உருவாக்குகிறது. அரசு பொது இன்சூரன்ஸ் நிறு வனங்களை முழுமையாக தனி யாருக்கு விற்பனை செய்ய வழிவகுக் கும் ஜிஐபிஎன்ஏ (GIBNA) சட்டத்  திருத்தத்தை ஒன்றிய அரசு திரும் பப்பெற வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூ ரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூ ரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். இதன் மூலம்  தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்க ளுக்கு இடையிலான போட்டியை எதிர்கொள்ள முடியும். செலவு குறை யும். லாபம் அதிகரிக்கும். எல்ஐசி நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்கை தனியா ருக்கு தாரை வார்க்கும் வேலையை ஒன்றிய அரசு செய்துள்ளது. வரும் காலத்தில் இந்த சதவீதத்தை அதி கரிக்க ஒன்றிய அரசு எடுக்கும் நட வடிக்கைகளை முறியடிக்கும் வகை யில் எங்களது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகள் இருக்கும்.

சில அரசு வங்கிகளை ஒன்றிய  அரசு ஒன்றிணைத்து ஒரே வங்கியாக  மாற்றியுள்ளது. இதன் மூலம் அரசு  வங்கிகள் தனியார் வங்கிகளுடன் போட்டியிடுவது எளிதாக்கப்பட்டுள் ளது. ஆனால், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. வங்கி யை ஒன்றிணைக்கும் போது ஏன் பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிணைக்க முடியாது? ஒன்றிய அரசின் பொருளாதாரச் சிந்தனை ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ் வொரு விதமாக உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர்ந்துள் ளது. பண மதிப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பலவீன மாகிவிட்டது. பணத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்துவருகிறது. இப்பிரச்சனைகளை ஒன்றிய அரசு தீர்க்கவில்லை. மற்றொருபுறத்தில் மக்களை  பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறு கிறது. மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது.  அரசு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறு வனங்களை பாதுகாப்பது மட்டு மல்ல; நாட்டை பாதுகாக்கும் பணி யிலும் பொது இன்சூரன்ஸ் ஊழி யர்கள் தொடர்ந்து பங்கேற்பார்கள். ஊழியர்களின் கோரிக்கையைப் பொறுத்தவரை, 2017-ஆம் ஆண்டிற்  குப் பின் ஊதிய உயர்வு அமலாக வில்லை. இது தொடர்பாக தொழிற்  சங்கங்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஊழி யர்களுக்கு பங்கமில்லாமல் ஊதிய உயர்வு குறித்த அறிக்கையை வெளி யிட வேண்டுமென்றார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சங்க நிர்வாகி கள் உடனிருந்தனர்.