states

img

இபிஎஸ் 95 ஓய்வூதியர்களுக்கு ரூ.9000 ஓய்வூதியம் வழங்குக!

சென்னை, மே 8 - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - 1995 திட்ட (இபிஎஸ் 95) ஒய்வூதி யர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதி யமாக 9ஆயிரம் ரூபாய் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ்95 ஒய்வூதியர்களின் மாநில கோரிக்கை மாநாடு ஞாயிறன்று (மே 8) சென்னையில் நடைபெற்றது. இந்த  மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், “மனு கொடுப்பதன் மூலம் கோரிக்கைகள் நிறைவேறாது. ஓய்வூதியர்கள் ஒன்று பட்டு போராடுவதன் மூலமே கோரிக்கை களை வெல்ல முடியும். தற்போது பணியில் இருப்பவர்களையும் அணி திரட்ட வேண்டும்” என்றார். இபிஎஸ் 95 ஓய்வூதியர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உயர் ஓய்வூதியத்தை தர வேண்டும்.

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது. கேரள அரசைப்போன்றே தமிழக அரசும் இபிஎஸ்-95 ஓய்கூதியர்களக்கு 1600 ரூபாய் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இபிஎஸ்-95 ஓய்வூதியர்க ளையும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தி தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், உழைக்கு மக்கள் மாமன்ற தலைவர் ஆர்.குசேலர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, சங்கத்தின் செயலாளர் கே.பி.பாபு மற்றும் ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ஆவடி அந்திரிதாஸ் (எம்எல்எப்), சங்க நிர்வாகிகள் எஸ்.உமாகாந்தன், டி.சுரேஷ்குமார், கே.கனகராஜ், வி.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.