புதுதில்லி, மே 16- சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்த மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்களை கொடுத்த பாஜக தலைவரைக் கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுதும் மே 18 வியாழக்கிழமை அன்று தர்ணா, பேரணி, மெழுகுவர்த்தி பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்திடு மாறு வெகுஜன அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன. இதுதொடர்பாக சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்திட்ட நம் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு, பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் கைது செய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தி புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் மேற்கொண்டுவரும் அறப் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடு முழுதும் இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டி ருக்கின்றன. எனினும் குற்றமிழைத்த கயவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுவரை ஒன்றிய அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.