states

img

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஆதரவாக மே 23ல் போராட்டம்

சென்னை,மே 13- போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை வழங்கக் கோரி வரும் 23ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூ தியர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைவர் நெ.இல.ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் கே.ராக வேந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தனியாரிடமிருந்து போக்குவரத்து துறையை அரசுத் துறையாக மாற்றிய போது, மாநில அரசு ஓய்வூதியர்களைப் போல் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அரசே ஓய்வூதியம் அளிக்கும் என்று தமிழக அரசு உத்தரவாதமளித்தது. ஆனால் மாநில அரசே அந்த வாக் குறுதியை மீறுவது அனைத்து ஓய்வூதியர்களுக்கும், ஊழியர்க ளுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியளிக்கி றது. அதேபோல் பிற துறைகளில் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டும் கூட  போக்குவரத்து கழக ஓய்வூதியர்க ளுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட வில்லை. அரசு போக்குவரத்துக் கழக  ஓய்வூதியர்களுக்கு கடந்த 77 மாதங்களாக அகவிலைப்படி வழங்கப்படவில்லை.  அரசு ஊழியர், ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மட்டும் மருத்துவ காப்பீடு மறுக்கப்படுவது என்ன நியாயம். 2020ஆம் ஆண்டுக்கு பிறகு  ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை  எந்த பணப்பலன்களும் வழங்கப்பட வில்லை. 9 நாட்களாக பல்லாயிரக் கணக்கான ஓய்வூதியர்கள் சென்னையில் கூடி போராடிய பிறகும் அவர்கள் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை. மானியக் கோரிக்கையின் போதும், வியாழ னன்று அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என நினைத்தோம். ஆனால் எந்த  தீர்வும் எட்டப்படவில்லை. ஆட்சி  மாறினாலும் நியாயம் கிடைக்க வில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே வரும் 23ஆம் தேதி  முதற்கட்டமாக மாவட்ட தலைநகரங்க ளில் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்  ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளோம்.

அப்போது பிரச்சனைகளுக்கு சுமூக  தீர்வு காணவில்லை என்றால், மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்துத் துறை ஓய்வூதியர்களையும் திரட்டி  சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத்  தலைவர் எஸ்.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் கே.கர்சன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிர மணியம், செயலாளர் ராமநாதன், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி பென்ஷனர்ஸ் அசோசியேஷன் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர், அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.