சென்னை,ஜன.7- பல்கலைக்கழக துணைவேந்தர் நிய மனத்தில் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள யுஜிசியை கண்டித்து ஜனவரி 9 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங் களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டி ருக்கிறது. மாநில அரசின் தலைமையினால் அமைக்கப்படும் 5 பேர் கொண்ட தேடுதல் குழுவே பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தரை தேர்வு செய்யும். தற்போது இதனை 3 பேர் கொண்ட தேடுதல் குழுவாகவும் அதில் வேந்தரான ஆளுநர், யுஜிசியின் உறுப்பி னர், பல்கலைக்கழக உறுப்பினர் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருப்பார்கள் என அறிவித்துள் ளது. இந்த குழுவின் பெரும்பான்மை தேர்வே துணைவேந்தராக இருக்கும் நபரை முடிவு செய்யும். இத்தகைய புதிய தேடுதல் குழுவிற்கான வழிமுறைகள் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கல்வி உரிமை களை முழுவதுமாக பறித்திருக்கின்றது. மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தி னை தவிர்த்துவிட்டு, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. மாநில உயர்கல்வி நிறுவனங்களை அந்தந்த அரசுகளே பராமரித்துவரும் நிலை யில் அதற்கு போதுமான நிதியை கூட ஒதுக்காத யுஜிசியும், ஒன்றிய அரசும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது டன், சங்பரிவார ஆட்களை புகுத்தும் ஆர்.எஸ்.எஸ்சின் தொலைநோக்கும் திட்டம். ஜேஎன்யு போன்ற பல மத்திய பல்கலைக்கழகங்களில் இத்தகைய செயல்பாடுகளின் மூலம் அதன் சுதந்திரமான நடவடிக்கைகளை ஏற்கனவே முடக்கியிருக்கின்ற ஒன்றிய அரசாங்கம் அதே போல மாநில பல்கலைக் கழகங்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறது.
தனியார் நிறுவன அதிகாரிகளை புகுத்த முயற்சி
மேலும், புதிய வழிகாட்டுதலில் துணை வேந்தருக்கான தகுதி வரையறைகள் என்பது கல்வி சார்ந்த பணிகளில் இருந்து விலக்களிக்கப் பட்டு, தனியார் நிறுவனங்களின் மூத்த அதி காரிகள், பொதுத்துறைகளின் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் துணைவேந்தராக விண்ணப்பிக்கலாம் எனவும் யுஜிசி திருத்தி யுள்ளது. பல்கலைக்கழகங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர் கல்விப்பணி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்பது கட்டாயம் இல்லை என்று மாற்றுவது அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக பாதிக்கும். ஆர்எஸ்எஸ் பேர் வழிகளை நுழைக்க ஏற்பாடு பல்கலைக்கழக துணைவேந்தர் நிய மனத்துக்கான தேடுதல் குழுவுக்கான புதிய வழிகாட்டுதல்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை சார்ந்த நபர்களை பல்கலைக்கழகங்களில் புகுத்துவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கின்ற, அரசியலமைப்பு வழங்கியுள்ள கூட்டாட்சி அமைப்புக்கே எதிரானது. யுஜிசியின் இத்தகைய நடவடிக்கையை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு கல்வியாளர்கள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் சக்திகள் இதற்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு இந்நட வடிக்கையினை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை களை விரைந்து எடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் தேர்வு செய்யும் அறிவிப்பை யூஜிசி திரும்பப் பெற வலியுறுத்தி ஜனவரி 9 வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரியில் போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் அறை கூவல் விடுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.